Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 363 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
363ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 4
உரக மெல்லணையான் கையில் உறை சங்கம் போல் மட வன்னங்கள்
நிரை கணம் பரந் தேறும் செங்கமல வயல் திருக் கோட்டியூர்
நரக நாசனை நாவிற் கொண்டழையாத மானிட சாதியர்
பருகு நீரும் உடுக்குங்கூறையும் பாவம் செய்தனதாங் கொலோ–4-4-4
உரகம் மெல்,Uragam Mel - திருவனந்தாழ்வானை ஸுகுமாரமான
அணையான்,Anaiyaan - படுக்கையாக வுடைய எம்பெருமானது
கையில் உறை,Kaiyil Urai - திருக் கையில் உள்ள
சங்கம் போல்,Sangam Pol - ஸ்ரீ பாஞ்ச ஜந்யம் போல் (வெளுத்த)
மட அன்னங்கள்,Mada Annangal - மடப்பம் பொருந்திய ஹம்ஸங்களானவை
ஏறும்,Erum - ஏறி யிருக்கப் பெற்ற
செம் கமலம்,Sem Kamalam - செந்தாமரை மலர்களை யுடைய
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
நரகம் நாசனை,Naragam Naasanai - (தன்னடியார்க்கு) நரக ப்ரவேசத்தை ஒழித்தருளுமவனமான எம்பெருமானை
நாவில் கொண்டு,Naavil Kondu - நாவினால்
மானிட சாதியர்,Maanida Saathiyar - மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்கள்
பருகும்,Parugum - குடிக்கின்ற
நீரும்,Neerum - தண்ணீரும்
உடுக்கும்,Udukkum - உடுத்துக் கொள்ளுகிற
கூறையும்,Kooraiyum - வஸ்திரமும்
பாவம் செய்தன தான் கொல் ஓ,Paavam Seithana Thaan Kol O - பாவஞ்செய்தனவோ தான்!: