Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3634 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3634திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (ஸ்ரீ ஆறாயிரப்படி –பகவத் தர்சன அபேக்ஷராய் இருப்பாருடைய துக்கங்களை போக்கும் திரு நாவாயை நமக்கும் ஒரு நாள் குறுகுகைக்கு உபாயம் உண்டோ என்கிறார்) 1
அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1
அவனை,Avanai - பரமபோக்யனான ஸர்வேச்வானானவனை
ஆகத்து,Aagathu - தங்கள் உள்ளத்திலே
சிறுத்தும் மனத்து ஒன்றிய,Siruththum manaththu onriya - நிலைநிறுத்தி வைத்துக்கொள்ள வேணுமென்கிற கருத்திலே ஒருமைப்பாடுடைய
சிந்தையினார்க்கு,Sinthaiyinaarkku - மநோரதத்தையுடைய பக்தர்களுக்கு
வினை ஆயின அறுக்கும்,Vinai aayina arukkum - அநுபவ விரோதிகளையெல்லாம் போக்கக் கடலதாய்
வெறி தண் மலர்,Veri than malar - ஈறு மணம்மிக்குக் குளிர்ந்த புஷ்பங்களை கொண்ட
சோலைகள் சூழ்,Solaigal soozh - சோலைகளாலே சூழப்பட்டதான
திருநாவாய்,Thirunaavaai - திருநாவாயென்னும் திருப்பதியானது
கொடியேற்கு,Kodiyerku - கொடியேனான வெனக்கு
குறுக்கும் வகை உண்டு கொல் ஓ,Kurukkum vagai undu kol o - கிட்டும் வகையுண்டோ?