Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3636 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3636திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (திருநாவாயில் மஹா கோஷ்டியிலே சென்று சேர்ந்து அநுபவிக்கும் நாள் எதுவோ? அறிகிறிலேன் என்று அலமருகின்றார்.) 3
எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3
அணுக பெறுநாள் எவை கொள்ல என்று,Anuga perunaal evai kol enru - கிட்டப்பெறும் நான் எந்நாளோ வென்று
எப்போதும்,Eppothum - எக்காலத்திலும்
சுவையில் மனம் இன்றி,Suvaiyil manam inri - இரட்டைப்பட்ட நெஞ்சின்றிக்கே ஏகாக்ரசித் தனாய் கொண்டு
கண் நீர்கள் கலுழ்வன்,Kan neergal kaluzhvan - கண்ணநீர் பெருவெள்ளம் நிற்பேன்
நவை இல் திரு நாரணன் சேர்,Navai il Thiru Naranan ser - ஹேயப்ரத்யநீகளான திருமால் வர்த்திக்கிற
திருநாவாய் அவையுள்,Thirunaavaai avaiyul - திருநாவாய்ப்பதியில் திருவோலக்கத்திலே
புகல் ஆவது ஓர் நாள் அறியேன்,Pugal aavathu or naal ariyen - சென்று சேர்வதற்கீடான வொரு நானை அறிகின்றிலேன்.