| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3637 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (ஆத்மாவுள்ளவரையில் கைங்கரியம் பண்ணும்படி விஷயீகரிக்கப்பெற்ற நான் திருநாவாயில் நம்பின்னைப் பிராட்டியோடே கூடவிருக்கிற இருப்பிலே அடிமை செய்ப்பெறும் நாள் என்றோ! அறிகிலேன் என்கிறார்.) 4 | நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும் மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன் நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4 | நீள் ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய்,Neel aar malar solaigal soozh Thirunaavaai - ஓங்கி நிறைந்த பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருநாவாயிலே (எழுந்தருளியிருக்கிற) வாள் ஏய் தட கண்,Vaal ey thada kan - வாள் போன்ற பெரிய கண்களையுடையளாய் மட பின்னை மணாளா,Mada pinnai manaalan - நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனானவனே! நானும்,Naanum - அடியேனும் மீளா அடிமை பணி செய்ய புகுந்தேன்,Meelaa adimai pani seiya pugundhen - இடையறாத நித்ய கைங்கரியத்திலே நிரதனானேன். எனக்கு உள்ளன நான் அறியேன்,Enakku ullana naan ariyen - அறுக்கு எனக்கு நீ ஸங்கல் பித்துவைத்த நான் அறிகின்றிலேன். |