| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3638 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (என் கண்களின் விடாய்தீரத் திருநாவாயைக் கண்டு அநுபவிக்கப்பெறுவது என்றைக்கோ வென்கிறார்.) 5 | மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம் விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5 | மலர்மங்கைக்கும்,Malarmangaikkum - பெரிய பிராட்டியாருக்கும் மண் மடந்தைக்கும்,Man madandaikkum - பூமிப் பிராட்டிக்கும் மணாளன்,Manaalan - மணயாளனாய் உலகத்து உயிர் தேவர் கட்கு எல்லாம் கண்ணாளன்,Ulakaththu uyir thevar kadku ellaam kannaalaan - மண்ணுலகத்ததவர்க்கும் விண்ணுலகத்தவர்க்கு மெல்லாம் நிர்வாஹகனாய் வீண் ஆளன்,Veen aalan - பரமபதத்திலுள்ளாவைரயும் அடிமை கொள்ளுபவனான ஸர்வேச்வரன் விரும்பி உறையும் திருநாமாய்,Virumbi uraiyum Thirunaamaai - ஆதாரத்தோடு வர்த்திக்கிற திரு நாவாயை கண்ண ஆர கண்டு,Kanna aara kandu - கண்கள் வயிறு நிறையும்படி கண்டு இங்கு களிக்கிறது என்று கொல்,Ingu kalikkirathu enru kol - இங்கே ஆனந்திப்பது என்றைக்கோ? |