Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 364 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
364ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 5
ஆமையின் முதுகத்திடைக் குதி கொண்டு தூ மலர் சாடிப் போய்
தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர்த் திருக் கோட்டியூர்
நேமி சேர் தடங் கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடை
பூமி பாரங்க ளுண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே–4-4-5
இள,Ila - இளமை பொருந்திய
வாளைகள்,Vaalagal - ‘வாளை’ என்னும் மீன்கள்
ஆமையின்,Aamaiyin - ஆமைகளினுடைய
முதுகத்திடை,Mudugaththidai - முதுகின் மேல்
குதி கொண்டு,Kudhi Kondu - குதித்துக் கொண்டும்
தூ மலர்,Thoo Malar - நல்ல புஷ்பங்களை
சாடிப் போய்,Saadi Poi - உழக்கிக் கொண்டும்
தீமை செய்து,Theemai Seidhu - (க்ஷுத்ர ஜந்துக்களைக் கலக்கி ஒட்டுகையாகிற தீம்புகளைச் செய்து கொண்டும்
விளையாடு,Vilaiyaadu - விளையாடுமிடமான
நீர்,Neer - நீரை யுடைய
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக்கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
நேமி,Nemi - திருவாழி யாழ்வானோடு
சேர்,Ser - சேர்ந்திருக்கிற
தட,Thada - பெரிய
கையினானை,Kaiyinaanai - திருக் கையை யுடையனுமான எம்பெருமானை
நினைப்பு இலா,Ninaippu Ilaa - (ஒரு காலும்) நினையாத
வலி நெஞ்சு உடை,Vali Nenju Udai - கடினமான நெஞ்சை உடையவர்களும்
பூமி பாரங்கள்,Bhoomi Paarangal - பூமிக்குச் சுமையாயிருப்பவர்களுமான பாவிகள்
உண்ணும்,Unnum - உண்கிற
சோற்றினை,Sotrinai - சோற்றை
வாங்கி,Vaangi - பிடுங்கி விட்டு, (எறிந்து)
புல்லை,Pullai - (அறிவற்ற பசுக்களுக்கு உண்வான) புல்லைக் கொண்டு
திணிமின்,Thinimin - (அவர்கள் வயிற்றைத்) துற்று விடுங்கள்.