| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3640 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (திருநாவாயிலே நித்யவாஸம் பண்ணியருளாநின்ற தேவரீர் அடியேனுடைய அநந்யகதித்வத்தைக் கண்டு அருள் செய்தருளவேணுமென்கிறார்.) 7 | கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் தேவா சுரம் செற்றவனே திருமாலே நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7 | கே ஆகிய மா வலியை,Ke aagiya maa valiyai - பிரபுவாகத் தன்னை யயீமானித்திருந்த மஹாபலிடத்திளின்றும் நிலம் கொண்டாய்,Nilam kondai - பூமியை இரந்து பெற்றவளே தேவாசுரம் செற்றவனே,Devaasuram setravaney - தேவாஸீர யுத்த்தில் ஒரு தலைக்கு நிர்வாஹகனாயிருந்தவனே திருமாலே,Thirumaaley - திருமகள் கொழுநனே நாவாய் உறைகின்ற,Naavaai uraiginra - திருநாவாயிலே வர்த்திக்கிற என் நாரணநம்பீ,En Narananambi - எனது நாராயணமூர்த்தியே ஆஆ,Aa aa - ஐயோ இவன் அடியான் என்று அருளாய்,Ivan adiyaan enru arulaai - இவன் நமக்கு அடியவனன்றோவென்று க்ருபை பண்ணி யருள வேணும் |