| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3641 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (கீழ்ப்பாட்டில் “ஆவாவடியானிவனென்றருளாயே” என்றவர், இப்பாட்டில், அருளினாலுமருள்க ; அருளாதொழியினுமொழிக என்கிறார்.) 8 | அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய் மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8 | அருளாது ஒழிவாய்,Arulaathu ozhivaai - என்பால் அருள் செய்யாதிருக்கிலுமிரு அடியேனை,Adiyenai - அடியேன் பக்கலில் அருள் செய்த,Arul seydha - க்ருபைபண்ணி பொருள் ஆக்கி,Porul aakki - ஒரு உஸ்துவாக்கி உன்பொன் அடி கீழ் புகவைப்பாள்,Unpon adi keezh pugavaippaalo - உன் திருவடிகளின் கிழே வைத்துக் கொண்டாலும் கொள். தென் திருநாவாய் என் தேவே,Then Thirunaavaai en devey - அழகிய திருநாவாயில் வர்த்திக்கிற எம்பெருமானே மருளே இன்றி,Marule inri - ஒரு காலும் அஜ்ஞான கந்தமில்லாதபடி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளேதரு,Unnai en nenjaththu iruththum theruledharu - உன்னை என்னுடைய நெஞ்சிலேயிருத்தியநுபவிக்கும்படியான தெளிந்த அறிவைத் தந்தருள வேணும் |