| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3643 | திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (உன்னைக் காணப் பெறாமையாலே நெஞ்சழிந்து கூப்பிடா நின்றேன் காணென்கிறார்.) 10 | அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும் சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன் கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10 | நொந்து ஆர்,Nondhu aar - கொத்தாக நிறைந்துள்ள மலர் சோலைகள் சூழ்,Malar solaigal soozh - மலர்களையுடைய சோலைகளாலே சூழப்பட்ட திருநாவாய்,Thirunaavaai - திருநாவாய்ப்பதியிலே வந்தே உறைகின்ற,Vande uraiginra - (பரமபதம் முதலான விடங்களையும் விட்) வந்து நித்யவாஸம் பண்ணுகிற எம் மா மணிவண்ணா,Em maa manivanna - எமக்குப் பரமபோக்யனான நீல மணிவண்ணனே! அந்தோ அணுக பெறும் நாள்என்று,Andho anuga perum naal enru - ஐயோ! உன்னைக்கிட்டிவாழப் பெறுவதுண்டோ வென்று எப்போதும்,Eppothum - ஸர்வகாலமும் சிந்தை கலங்கி,Sinthai kalangi - நெஞ்ச தளும்பி திருமால் என்று அழைப்பன்,Thirumaal enru azaippan - திருமாலே! யென்று கூப்பிடா நின்றேன். |