திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3643 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3643திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (உன்னைக் காணப் பெறாமையாலே நெஞ்சழிந்து கூப்பிடா நின்றேன் காணென்கிறார்.) 10
அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும் சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன் கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10
பதவுரை Show / Hide
நொந்து ஆர்,Nondhu aar - கொத்தாக நிறைந்துள்ள
மலர் சோலைகள் சூழ்,Malar solaigal soozh - மலர்களையுடைய சோலைகளாலே சூழப்பட்ட
திருநாவாய்,Thirunaavaai - திருநாவாய்ப்பதியிலே
வந்தே உறைகின்ற,Vande uraiginra - (பரமபதம் முதலான விடங்களையும் விட்) வந்து நித்யவாஸம் பண்ணுகிற
எம் மா மணிவண்ணா,Em maa manivanna - எமக்குப் பரமபோக்யனான நீல மணிவண்ணனே!
அந்தோ அணுக பெறும் நாள்என்று,Andho anuga perum naal enru - ஐயோ! உன்னைக்கிட்டிவாழப் பெறுவதுண்டோ வென்று
எப்போதும்,Eppothum - ஸர்வகாலமும்
சிந்தை கலங்கி,Sinthai kalangi - நெஞ்ச தளும்பி
திருமால் என்று அழைப்பன்,Thirumaal enru azaippan - திருமாலே! யென்று கூப்பிடா நின்றேன்.