Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 365 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
365ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 6
பூதமைந்தொடு வேள்வியைந்து புலன்களைந்து பொறிகளால்
ஏதமொன்று மிலாத வண் கையினார்கள் வாழ்திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின் றேத்துவார் களுழக்கிய
பாத தூளி படுதலால் இவ் வுலகம் பாக்கியம் செய்ததே–4-4-6
பூதம் ஐந்தொடு,Poodham Ainthodu - பஞ்ச பூதமாகிய சரீரத்தினாலும்
ஐந்து வேள்வி,Aindhu Velvi - பஞ்ச மஹா யஜ்ஞங்களினாலும்
ஐந்து புலன்கள்,Aindhu Pulangal - (சப்தம் முதலிய) ஐந்து விஷயங்களினாலும்
(ஐந்து) பொறிகளால்,Aindhu Porigalal - பஞ்சேந்திரியங்களினாலும் (ஸம்பவிக்கக்கூடிய)
ஏதம் ஒன்றும் இலாத,Aedham Ondrum Ilaadha - குற்றமொன்றுமில்லாதவர்களும்
வண் கையினார்கள்,Van Kaiyinaargal - உதாரணமான கைகளை யுடையவர்கள்
வாழ்,Vaazh - வாழ்விடமான
திருக்கோட்டியூர்,Thirukkottiyoor - திருக்கோட்டியூரில் எழுந்தருளி யிருப்பவனும்)
நாதனை,Naadhanai - (எமக்கு) ஸ்வாமியும்
நரசிங்கனை,Narasinganai - நரஸிம்ஹ ஸ்வரூபியுமான எம்பெருமானை
நவின்று,Navindru - அநுஸந்தித்து
ஏத்துவார்கள்,Eaithuvaargal - துதிக்குமவரான பாகவதர்கள்
உழக்கிய பாதத் துளி,Uzhakkiya Paadhath Thuli - திருவடிகளினால் மிதித்தருளின தூளினுடைய
படுதலால்,Paduthalaal - ஸம்பந்தத்தினால்
இ உலகம்,I Ulagam - இந்த லோகமானது
பாக்கியம் செய்தது,Paakiyam Seithathu - பாக்யம் பண்ணினதாகக் கொள்ளப்படும்.