| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 365 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 6 | பூதமைந்தொடு வேள்வியைந்து புலன்களைந்து பொறிகளால் ஏதமொன்று மிலாத வண் கையினார்கள் வாழ்திருக் கோட்டியூர் நாதனை நரசிங்கனை நவின் றேத்துவார் களுழக்கிய பாத தூளி படுதலால் இவ் வுலகம் பாக்கியம் செய்ததே–4-4-6 | பூதம் ஐந்தொடு,Poodham Ainthodu - பஞ்ச பூதமாகிய சரீரத்தினாலும் ஐந்து வேள்வி,Aindhu Velvi - பஞ்ச மஹா யஜ்ஞங்களினாலும் ஐந்து புலன்கள்,Aindhu Pulangal - (சப்தம் முதலிய) ஐந்து விஷயங்களினாலும் (ஐந்து) பொறிகளால்,Aindhu Porigalal - பஞ்சேந்திரியங்களினாலும் (ஸம்பவிக்கக்கூடிய) ஏதம் ஒன்றும் இலாத,Aedham Ondrum Ilaadha - குற்றமொன்றுமில்லாதவர்களும் வண் கையினார்கள்,Van Kaiyinaargal - உதாரணமான கைகளை யுடையவர்கள் வாழ்,Vaazh - வாழ்விடமான திருக்கோட்டியூர்,Thirukkottiyoor - திருக்கோட்டியூரில் எழுந்தருளி யிருப்பவனும்) நாதனை,Naadhanai - (எமக்கு) ஸ்வாமியும் நரசிங்கனை,Narasinganai - நரஸிம்ஹ ஸ்வரூபியுமான எம்பெருமானை நவின்று,Navindru - அநுஸந்தித்து ஏத்துவார்கள்,Eaithuvaargal - துதிக்குமவரான பாகவதர்கள் உழக்கிய பாதத் துளி,Uzhakkiya Paadhath Thuli - திருவடிகளினால் மிதித்தருளின தூளினுடைய படுதலால்,Paduthalaal - ஸம்பந்தத்தினால் இ உலகம்,I Ulagam - இந்த லோகமானது பாக்கியம் செய்தது,Paakiyam Seithathu - பாக்யம் பண்ணினதாகக் கொள்ளப்படும். |