Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 367 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
367ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 8
நளிர்ந்த சீலன் நயாசல னபிமான துங்கனை நாடொறும்
தெளிந்த செல்வனைச் சேவகங் கொண்ட செங்கண் மால் திருக்கோட்டியூர்
குளிர்ந்துறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவாருள்ள நாட்டினுள்
விளைந்த்த தானியமு மிராக்கர் மீது கொள்ள கிலார்களே–4-4-8
நளிர்ந்த சீலன்,Nalirndha Seelan - குளிர்ந்த ஸ்வபாவத்தை யுடையவரும்
நயாசலன்,Nayaasalan - நீதிநெறி தவறாதவரும்
அபிமான துங்கனை,Abimaana Thunganai - இடைவிடாது எம்பெருமானை அநுபவிக்கையாலுண்டான) அஹங்காரத்தால் உயர்ந்தவரும்
நாள் தொறும் தெளிந்த செல்வனை,Naal Thorum Thelintha Selvanai - நாடோறும் தெளிந்து வரா நின்றுள்ள கைங்கர்ய ஸம்பத்தை யுடையவருமான செல்வ நம்பியை
சேவகம் கொண்ட,Sevagam Konda - அடிமை கொண்டவனாய்
செம் கண் மால்,Sem Kan Maal - செந் தாமரைபோன்ற கண்களையுடையவனாய் (அடியார் பக்கல்) மோஹமுடையனாய்
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில்
குளிர்ந்து உறைகின்ற,Kulirndhu Uraiginra - திருவுள்ளமுகந்து எழும் தருளி யிருப்பவனான எம்பெருமானுடைய
கோவிந்தன் குணம் படுவார்,Govindan Gunam Paduvaar - கல்யாண குணங்களைப் பாடுமவரான ஸ்ரீவைஷ்ணவர்கள்
உள்ள நாட்டினுள் விளைந்த தானியமும்,Ulla Naattinul Vilaindha Thaniyamum - எழுந்தருளி யிருக்கிற நாட்டிலே விளைந்த தாந்யத்தையும்
இராக்கதர்,Raakkathar - ராக்ஷஸர்கள்
மீது கொள்ள கிலார்கள்,Meedhu Kolla Kilaargal - அபஹரிக்க மாட்டார்கள்