| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 368 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 9 | கொம்பினார் பொழில் வாய் குயிலினம் கோவிந்தன் குணம் பாடு சீர் செம்பொனார் மதிள் சூழ் செழுங்கழனி யுடைத் திருக் கோட்டியூர் நம்பனை நர சிங்கனை நவின்றேத்து வார்களைக் கண்டக்கால் எம்பிரான் தன் சின்னங்கள் இவரிவரென்று ஆசைகள் தீர்வனே–4-4-9 | கொம்பின் ஆர்,Kombin Aar - கிளைகளாலே நெருங்கின பொழில் வாய்,Pozhil Vaai - சோலைகளிலே குயில் இனம்,Kuyil Inam - குயில்களின் திரள் கோவிந்தன்,Govindan - கண்ண பிரானுடைய, குணம்,Gunam - சீர்மைகளை பாடு,Paadu - பாடா நிற்கப் பெற்றதும், சீர்,Seer - சிறந்த செம் பொன் ஆர்,Sem Pon Aar - செம் பொன்னாலே சமைந்த மதிள்,Mathil - மதிள்களாலே சூழ்,Soozh - சூழப் பட்டதும் செழு,Sezhu - செழுமை தங்கிய கழனி உடை,Kazhani Udai - கழனிகளை யுடையதுமான திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்). நம்பனை,Nambanai - (ரக்ஷகன் என்று) விச்வஸிக்கக் கூடியவனும் நரசிங்கனை,Narasinganai - நரஹிம்ஹ ரூபியுமான ஸர்வேச்வரனை நலின்று,Nalindru - அநுஸந்தித்து ஏத்துவரர்களை,Eaithtuvarargalai - துதிக்கும் பாகவதர்களை கண்டக்கால்,Kandakkaal - (யான்) ஸேவிக்கப் பெறுவேனாகில் இவர் இவர்,Ivar Ivar - இந்த இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பிரான் தன்,Empiraan Than - எம்பெருமானுடைய சின்னங்கள்,Sinnangal - அடையாளமாயிருப்பவர்கள்” என்று,Endru - என்று அநுஸந்தித்து ஆசைகள்,Aasaigal - நெடுநாளாய் பிறந்துள்ள ஆசைகளை தீர்வன்,Theervan - தலைக் கட்டிக் கொள்வேன். |