Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 368 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
368ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 9
கொம்பினார் பொழில் வாய் குயிலினம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழுங்கழனி யுடைத் திருக் கோட்டியூர்
நம்பனை நர சிங்கனை நவின்றேத்து வார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவரிவரென்று ஆசைகள் தீர்வனே–4-4-9
கொம்பின் ஆர்,Kombin Aar - கிளைகளாலே நெருங்கின
பொழில் வாய்,Pozhil Vaai - சோலைகளிலே
குயில் இனம்,Kuyil Inam - குயில்களின் திரள்
கோவிந்தன்,Govindan - கண்ண பிரானுடைய,
குணம்,Gunam - சீர்மைகளை
பாடு,Paadu - பாடா நிற்கப் பெற்றதும்,
சீர்,Seer - சிறந்த
செம் பொன் ஆர்,Sem Pon Aar - செம் பொன்னாலே சமைந்த
மதிள்,Mathil - மதிள்களாலே
சூழ்,Soozh - சூழப் பட்டதும்
செழு,Sezhu - செழுமை தங்கிய
கழனி உடை,Kazhani Udai - கழனிகளை யுடையதுமான
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்).
நம்பனை,Nambanai - (ரக்ஷகன் என்று) விச்வஸிக்கக் கூடியவனும்
நரசிங்கனை,Narasinganai - நரஹிம்ஹ ரூபியுமான ஸர்வேச்வரனை
நலின்று,Nalindru - அநுஸந்தித்து
ஏத்துவரர்களை,Eaithtuvarargalai - துதிக்கும் பாகவதர்களை
கண்டக்கால்,Kandakkaal - (யான்) ஸேவிக்கப் பெறுவேனாகில்
இவர் இவர்,Ivar Ivar - இந்த இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள்
எம்பிரான் தன்,Empiraan Than - எம்பெருமானுடைய
சின்னங்கள்,Sinnangal - அடையாளமாயிருப்பவர்கள்”
என்று,Endru - என்று அநுஸந்தித்து
ஆசைகள்,Aasaigal - நெடுநாளாய் பிறந்துள்ள ஆசைகளை
தீர்வன்,Theervan - தலைக் கட்டிக் கொள்வேன்.