Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 369 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
369ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || "நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)" 10
காசின் வாய்க் கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு
தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியார்கள் எந்தம்மை விற்கவும் பெறுவார்களே–4-4-10
காசின் வாய்,Kaasin Vaai - ஒருகாசுக்கு
கரம்,Karam - ஒரு பிடி நெல்
விற்கிலும்,Virkilum - விற்கும்படியான துர்ப்பிக் ஷகாலத்திலும்
சோறு இட்டு,Sooru Ittu - (அதிதிகளுக்கு) அன்னமளித்து
தேச வார்த்தை,Desa Vaarthai - புகழ்ச்சியான வார்த்தைகளை
படைக்கும்,Padaikkum - ஸம்பாதித்துக் கொள்ளுமவரும்
வண் மங்கையினார்கள்,Van Mangaiyinaargal - உதாரமான கையை யுடையவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்,Vaazh - வாழுமிடமான
திருக் கோட்டியூர்,ThirukKottiyoor - திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற)
கேசவா,Kesavaa - கேசவனே!
புருடோத்தமா,Purudhooththamaa - புருஷோத்தமனே!
காவாது,Kaavaadhu - (தமக்குள்ள பொருள்களை ) மறைத்திடாது
மாறு இலி,Maatru Ili - பதில் உபகாரத்தை எதிர் பாராமல்
கிளர் சோதியாய்,Kilar Sothiyaai - மிகுந்த தேஜஸ்ஸை யுடையவனே!
குறளா,Kuralaa - வாமந வேஷம் பூண்ட எம்பெருமானே!
என்று,Endru - என்றிப்படி
பேசுவார்,Pesuvaar - (எம்பெருமான் திரு நாமங்களைப்) பேசுமவரான
அடியார்கள்,Adiyaargal - பாகவதர்கள்
எந்தம்மை,Endhammmai - அடியோங்களை
விற்கவும் பெறுவார்கள்,Virkavum Peruvaargal - (தம் இஷ்டப்படி) விற்றுக் கொள்ளவும் அதிகாரம் பெறுவார்கள்.