திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 37 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
37பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 15
நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் நாக்கு வழித்துநீ ராட்டும்இந் நம்பிக்கு வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழ லீர்வந்து காணீரே–1-2-15
பதவுரை Show / Hide
அசோதை,Asothai - யசோதைப்பிராட்டி
நோக்கி,Nookki - (கண்ணபிரான்திருமேனியின் மென்மைக்குத் தக்கப்படி) பார்த்து ஆராய்ந்து
நுணுக்கிய,Nunikkiya - அரைத்த
மஞ்சளால்,Manjalal - மஞ்சட்காப்பாலே,
நாக்கு வழித்து,Naakku vazhiththu - நாக்கு வழித்து
நீராட்டும்,Neeraattum - ஸ்நாநம் செய்விக்கப் பெறுகின்ற
இ நம்பிக்கு,I nambikku - இக்கண்ணபிரானுடைய
வாக்கும்,Vaakkum - திருவாக்கும்
நயனமும்,Nayanamum - திருக்கண்களும்
வாயும்,Vaayum - அதரஸ்புரணமும்
முறுவலும்,Muruvalum - புன்சிரிப்பும்
மூக்கும் இருந்த ஆ காணீரே ,Mookkum irundha aa kaaneere - மூக்குமிருந்தபடியை காணீர்!
மொய்குழலீர் காணீரே,Moikuzhaleer kaaneere - செறிந்தகுழலையுடைய பெண்காள்! வந்து காணீர்!