| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 37 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 15 | நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் நாக்கு வழித்துநீ ராட்டும்இந் நம்பிக்கு வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணீரே மொய்குழ லீர்வந்து காணீரே–1-2-15 | அசோதை,Asothai - யசோதைப்பிராட்டி நோக்கி,Nookki - (கண்ணபிரான்திருமேனியின் மென்மைக்குத் தக்கப்படி) பார்த்து ஆராய்ந்து நுணுக்கிய,Nunikkiya - அரைத்த மஞ்சளால்,Manjalal - மஞ்சட்காப்பாலே, நாக்கு வழித்து,Naakku vazhiththu - நாக்கு வழித்து நீராட்டும்,Neeraattum - ஸ்நாநம் செய்விக்கப் பெறுகின்ற இ நம்பிக்கு,I nambikku - இக்கண்ணபிரானுடைய வாக்கும்,Vaakkum - திருவாக்கும் நயனமும்,Nayanamum - திருக்கண்களும் வாயும்,Vaayum - அதரஸ்புரணமும் முறுவலும்,Muruvalum - புன்சிரிப்பும் மூக்கும் இருந்த ஆ காணீரே ,Mookkum irundha aa kaaneere - மூக்குமிருந்தபடியை காணீர்! மொய்குழலீர் காணீரே,Moikuzhaleer kaaneere - செறிந்தகுழலையுடைய பெண்காள்! வந்து காணீர்! |