| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 374 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 4 | மேலெ ழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை உள்ளெழ வாங்கி காலுங் கையும் விதிர் விதிர்த் தேறிக் கண்ணுறக்க மாவதன் முன்னம் மூல மாகிய ஒற்றை யெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலு மாமே–4-5-4 | மேல் எழுந்தது ஓர் வாயு,Mel Ezhundhathu Or Vaayu - ஊர்த்துவச்ஸமானது கிளர்ந்து,Kilarndhu - மேலெழுந்ததனால் மேல் மிடறு,Mel Midaru - நெஞ்சானது உள் எழ வாங்கி,Ul Eza Vaangi - கீழே இடிந்து விழப் பெற்று காலும் கையும்,Kaalum Kaiyum - கால்களும் கைகளும் விதிர் விதிர்த்து ஏறி,Vidhir Vidhirththu Eaari - பதைபதைக்கப் பெற்று கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்,Kan Urakkam Adhu Aavadhan Munnam - தீர்க்க நித்திரையாகிய மரணம் ஸம்பவிப்பதற்கு முன்னே, மூலமாகிய ஒற்றை எழுத்தை,Moolamaagiya Otrai Ezhuththai - (ஸகலவேதங்களுக்கும்) காரணமாகிய ‘ஓம்’ என்ற பிரணவத்தை மூன்று மாத்திரைகள் உள் எழ வாங்கி,Moonru Maaththiraigal Ul Eza Vaangi - உச்சரிக்க வேண்டிய முறைப்படி உச்சரித்து வேலை வண்ணனை,Velai Vannanai - கடல் போன்ற நிறத்தை யுடையவனான எம்பெருமானை மேவுதிர் ஆகில்,Mevuthir Aagil - ஆச்ரயித்தீர்களாகில் விண் அகத்தினில்,Vin Agaththinil - ஸ்ரீவைகுண்டத்தில் மேவலும் ஆம்,Mevalum Aam - அடியார்கள் குழாங்களை) உடன் கூடவும் பெறலாம். |