Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 375 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
375ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 5
மடிவழி வந்து நீர் புலன் சோர வாயி லட்டிய கஞ்சியும் மீண்டே
கடைவழி வாரக் கண்டமடைப்பக் கண்ணுறக்க மாவதன் முன்னம்
தொடைவழி உம்மை நாய்கள் கவரா சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார்
இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசனென் றேத்த வல்லீரே–4-5-5
மடி புலன் வழி வந்து,Madi Pulan Vali Vandhu - லிங்கத்தின் வழியாக வந்து
நீர் சோர,Neer Sora - மூத்திர நீர் பெருகவும்
வாயில்,Vaayil - வாயிலே
அட்டிய,Attiya - பெய்த
கஞ்சியும்,Kanjiyum - பொரிக் கஞ்சியும்
கண்டம் அடைப்ப,Kandam Adaippa - கழுத்தை அடைக்கவும்
மீண்டும்,Meendum - மறுபடியும்
கடை வழி,Kadai Vali - கடை வாய் வழியாலே
வார,Vaara - (அந்தப் பொறிக் கஞ்சி வழியா நிற்கவும்
கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்,Kan Urakkam Adhu Aavadhan Munnam - கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்
இருடீகேசன் என்று,Erudeekesan Endru - (ஹ்ருஷீகேசன்’ என்ற (எம்பெருமான் திருநாமத்தைச் சொல்லி)
ஏத்த வல்லீர்,Eaitha Vallir - ஸ்தோத்திரம் பண்ண வல்லவர்களே!
நாய்கள்,Naaygal - (யம லோகத்திலுள்ள) செந்நாய்களானவை
உம்பை,Umbai - உங்களை
கவரா,Kavaraa - கவர மாட்டா;
உம்மை,Ummai - (யம கிங்கரர்களும் ) உங்களை
சூலத்தால்,Soolaththaal - சூலாயுதத்தால்
பாய்வதும் செய்யார்,Paayvadhuum Seiyaar - கத்தவும் மாட்டார்கள்;
நீர்,Neer - நீங்கள்
இடை வழியில்,Edai Valiyil - நடு வழியில்
கூறையும்,Kooraikum - வஸ்திரத்தையும்
இழவீர்,Izhavir - இழக்க மாட்டீர்கள்