| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 381 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 1 | காசும் கறை யுடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும் ஆசையினால் அங் கவத்தப் பேரிடும் ஆதர்காள் கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள். –4-6-1 | காசுக்கு,Kaasukku - ஒரு காசுக்காகவும் கறை உடை,Karai Udai - (தலைப்புகளில் நல்ல) கறைகளை யுடைய கூறைக்கும்,Kooraiykkum - வஸ்திரத்துக்காகவும் ஓர் கற்றைக்கும்,Or Katraikkum - ஒரு கட்டுக் கற்றைக்காகவும் (உண்டான) ஆசையினால்,Aasaiyinaal - ஆசையாலே பேர்,Per - (க்ஷத்ர பிள்ளைகளுக்கு) இடுகிற ஆதர்காள்,Aadhargaal - அறிவு கெட்டவர்களே! நீங்கள்,Neengal - நீங்கள் கேசவன்,Kesavan - கேசவனென்னுந் திருநாமத்தை யுடையவனும் நாயகன்,Naayagan - ஸர்வ சேஷியுமான நாரணன்,Naaranan - நாராணனுடைய பேர்,Per - திரு நாமங்களை இட்டு,Ettu - (உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு தேனித்து இருமின்,Theniththu Irumin - மகிழ்ச்சி கொண்டிருங்கள் தம் மன்னை,Tham Mannai - (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் நரகம் புகார்,Narakam Pugaar - துர்க் கதியை அடைய மாட்டார்கள். |