| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 383 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 3 | உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து எச்சம் பொலிந்தீர்காள் எஞ்செய்வான் பிறர் பேரிட்டீர் பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே நச்சுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-3 | எச்சம் பொழிந்தீர்காள்,Echcham Pozhindheergaal - ஸந்தாநத்தினால் விளக்குமவர்களே! உச்சியில்,Uchchiyil - உச்சியில் (தடவத் தக்க) எண்ணெயும்,Ennaiyum - எண்ணெயும் சுட்டியும்,Sutthiyum - (நெற்றியில் தொங்கும்படி கட்டத்தக்க) சுட்டியையும் வளையும்,Valaiyum - (கையில் அணியத் தக்க) வளையையும் உகந்து,Ugandhu - விரும்பி என் செய்வான் ,En Seivaan - ஏதுக்காக பிறர்,Pirar - (எம்பெருமானை யொழிந்த) மற்றவர்களுடைய பேர்,Per - பெயர்களை இட்டீர்,Ettir - (உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டீர்கள்? பிச்சை புக்க ஆகிலும்,Pitchai Pukka Aagilum - பிச்சையெடுத்து ஜீவித்தாலும் எம்பிரான் திருநாமமே,Empiraan Thirunaamame - எம்பெருமானுடைய திரு நாமத்தையே நச்சுமின்,Nachchumin - விரும்பி இடுங்கள்; (அப்படி இட்டால்) நாரணன்,Naaranan - இத்யாதி பூர்வவத் |