Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 384 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
384ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 4
மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக் கில்லை
வானுடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நானுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-4-6-4
மானிட சாதியில்,Maanida Saadhiyil - மநுஷ்ய ஜாதியில்
தோன்றிற்று,Thonritru - உண்டான
ஓர் மானிட சாதியை,Or Maanida Saadhiyai - ஒரு மநுஷ்ய ஜந்துவை
மானிட சாதியின் பேர் இட்டாள்,Maanida Saadhiyin Per Ittaal - (கர்ம பலன்களை அநுபவிக்கப் பிறந்த) மநுஷ்ய சாதியர்க்கு உரிய பெயரை இட்டழைத்தால்
மறுமைக்கு இல்லை,Marumaikku Illai - அத்ருஷ்ட பலம் (மோஷம்) பெறுகைக்கு யாதொரு வழியுமில்லையாம்,
வான் உடை,Vaan Udai - பரம பதத்தை (விபூதியாக) உடைய
மாதவா,Maadhavaa - ச்ரியபதியே
கோவிந்தா,Govindhaa - கோவிந்தனே!
என்று அழைத்தக் கால்,Endru Alaiththak Kaal - என்று (எம்பெருமான் திருநாமத்தை யிட்டு) அழைத்தால்,
நானுடை நாராணன்,Naanudai Naaranan - எனக்கு நாதனான நாராயணனுடைய திருநாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய
தம்மன்னை நரகம் புகார்,Thammannai Narakam Pugaar - (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள்.