Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 387 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
387ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 7
மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு அங்கு
எண்ண மொன் றின்றி யிருக்கும் ஏழை மனிசர்காள்
கண்ணுக் கினிய கரு முகில் வண்ணன் நாமமே
நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-7
கண்ணில் பிறந்து,Kannil Pirandhu - கண்ணில் நின்று முண்டாய்
மண் ஆகும்,Man Aagum - பின்பு மண்ணாய் விடுகிற
மானிடர்,Maanidar - அல்ப மநுஷர்களுடைய
பேர் இட்டு,Per Ittu - பெயரை (த் தங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு
அங்கு,Angu - ஆமுஷ்மிக பலத்தில்
எண்ணம் ஒன்று இன்றி இருக்கும்,Ennam Ondru Inri Irukkum - ஒரு விசாரமற்றிருக்கிற
ஏழை மணிசர்காள்,Ezhai Manisargaal - அறிவற்ற மனுஷ்யர்களை!
கண்ணுக்கு,Kannukku - கண்ணால் காண்கைக்கு
இனிய,Iniya - யோக்யனாயும்
கரு முகில்,Karu Mugil - காள மேகம் போன்ற
கண்ணன்,Kannan - நிறத்தை யுடைவனாயுமுள்ள எம்பெருமானுடைய
நாமமே,Naamame - திரு நாமத்தையே
கண்ணுமின் நாரணன்,Kannumin Naaranan - விரும்பி யிடுங்கள்
நாரணன் தம்மன்னை நரகம் புகார்,Naaranan Thammannai Narakam Pugaan - (இங்ஙனேயாகில்,) எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய
(அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள்.