திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3888 | உபதேச ரத்னமாலை || ஆழ்வார்களின் திரு அவதார க்ரமம் அருளுகிறார்- 4 | பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை
ஐயன் அருள் மாறன் சேரலர் கோன்–துய்ய பட்ட
நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன்
ஈதிவர் தோற்றத்து அடைவாம் இங்கு | பதவுரை Show / Hideபொய்கையாழ்வார் முதல்வர் -பூதத் தாழ்வார் இரண்டாமவர் -பேயாழ்வார் மூன்றாமவர் -கீர்த்தி வாய்ந்த திரு மலிசைப் பிரான் நான்காமவர் – அருள் மிக்க நம்மாழ்வார் ஐந்தாமவர் -குலசேகரப் பெருமாள் ஆறாமவர் -பரி சுத்தரான பெரியாழ்வார் ஏழாமவர்-தொண்டர் அடிப்பொடி யாழ்வார் எட்டாமவர் – பரம சாத்விகரான திருப் பாண் ஆழ்வார் ஒன்பதாமவர் -விலஷணரான திருமங்கை யாழ்வார் பத்தாமவர் இந்த வரிசைக் க்ராமமானது இவ் உலகில் இவ் வாழ்வார்களின் அவதார க்ரமமாகும் சிலர் ஆராய்ச்சி செய்வதாகப் புகுந்து மனம் போனவாறாக கல்பிப்பர் -அதனால் ஆஸ்திகர்களின் நெஞ்சு கலங்காமைக்காகப் பொய்யில்லாத மணவாள மா முனிகள் இங்கனே அடைவு தன்னை அமைத்து அருளுகிறார் |