திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3889 | உபதேச ரத்னமாலை || ஆழ்வார்கள் திருஅவதரித்த மாத நஷத்ரங்களை அருளிச் செய்கிறார் 5 | அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள்
இந்த வுலகில் இருள் நீங்க -வந்துதித்த
மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர் தாம் அறிய
ஈதென்று சொல்லுவோம் யாம் | பதவுரை Show / Hideஅழகிய தமிழ்ப் பாஷையினால் திவ்யப் பிரபந்தங்களை ஆராய்ந்து அருளிச் செய்த மேலே கூறிய ஆழ்வார்கள் இந்த இருள் தரும் மா ஞாலத்தில் அகவிருள் தொலைவதற்காக வந்து அவதரிக்கப் பெற்ற மாசங்களையும் நஷத்ரங்களையும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இன்னவை என்று இனி நாம் அருளிச் செய்வோம் இந்த முதல் ஆழ்வார்கள் இன்ன இடத்தில் அவதரித்தார்கள் எனபது காலப் பழமையால் நிச்சயிக்கப் போகாது -போன்ற வாக்கியப் பிறழ்வு விளைந்திட்டதே இங்கனே நேராமைக்காகவே மா முனிகள் ஆழ்வார்கள் அவதரித்த மாச நஷத்ர திவ்ய தேசங்களை இப்பிரபந்தத்தில் இட்டு அருளுகிறார் |