| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 39 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 17 | பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணன் புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே–1-2-17 | பருவம்,Paruvam - வயது நிரம்பாமே,Nirambaame - முதிருவதற்கு முன்னமே பார்எல்லாம்,Paar ellaam - பூமியிலுள்ளார் எல்லாரும் உய்ய,Uyyya - உஜ்ஜீவிக்கும்படியாக திருவின் வடிவு ஒக்கும்,Thiruvin vadivu okkum - பிராட்டியின் வடிவுபோன்ற வடிவையுடையளான தேவகி,Devagi - தேவகிப்பிராட்டியாலே பெற்ற,Pettra - பெறப்பட்டவனாய் உருவு கரிய,Uruvu kariya - உருவால் கறுத்ததாய் ஒளி,Oli - உஜ்ஜவலமான மணி,Mani - மணி போன்ற வண்ணன்,Vannan - வடிவையுடையனான கண்ணபிரானுடைய புருவம் இருந்த ஆ வந்து காணீரே,Pruvam irundha aa vandhu kaaneere - புருவம் இருந்த ஆ காணீர் பூண் முலையீர் வந்து காணீரே,Poon mulaiyeer vandhu kaaneere - ஆபரணம் பூண்ட முலையையுடைய பெண்காள்! வந்து காணீர்!! |