திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3910 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3910உபதேச ரத்னமாலை || மதுரகவிகள் உடைய திவ்ய பிரபந்தம் நாலாயிரத்தினுள் சேர்ந்தமை அருளிச் செய்கிறார் 26
வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்திமமாம் பதம் போல் சீர்த்த மதுரகவி செய்கலையை -ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல் நடுவே சேர்வித்தார் தாற்பர்யம் தேர்ந்து
பதவுரை Show / Hide
ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் எல்லாம் எம்பெருமான் உடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களைப் பரக்கப் பேசுவன
திருமந்தரம் த்வயம் சரம ஸ்லோஹம்-ரஹஸ்ய த்ரய பொருள்களையே விவரிப்பனவாகும்
நம பதார்த்தம் பாகவத சேஷத்வம் -காட்டுமே அத்தை கனக்கப் பேசும் கண்ணி நுண் சிறுத்தாம்பு அருளிச் செயல்களின் நடுவே
சேர்த்து அருளினார்கள் நிறைந்த புகழை உடைய நம் பூர்வாசாரியர்கள்