திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3928 | உபதேச ரத்னமாலை || 44 | தெள்ளியா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை
வள்ளல் வடக்குத் திரு வீதிப் பிள்ளை யிந்த
நாடறிய மாறன் மறைப் பொருளை நன்குரைத்தது
ஈடு முப்பத்தாறாயிரம் | பதவுரை Show / Hideதெள்ளியது ஆ செப்பு நெறி தன்னை -தெளிவாக அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தி க்ரமத்தை உட்கொண்டு நம்பிள்ளை உபன்யாசத்தைப் பகல் எல்லாம் கேட்டு இருந்து ஈடு -ஏடு படுத்தி வைத்தவர் வடக்குத் திரு வீதிப் பிள்ளை – நம்பிள்ளை நியமனம் படியாக எழுதவில்லை -நம்பிள்ளை தாரும் என வாங்கி பிறகு பகவன் நியமனத்தாலே பிரசாரத்திற்கு அருளும்படி யாயிற்று வள்ளல் -ஈடு ஏடு படுத்திய வள்ளல் தனம் -உலகுக்கு உயிர் போன்ற பிள்ளை லோகாசார்யர் – அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இரண்டு திரு புத்ர ரத்னங்களையும் பெற்று உதவியது பற்றியும் வள்ளல் தன்மை உண்டே |