திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 393 | பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 3 | அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்தி அழலுமிழ் ஆழி கொண் டெறிந்து அங்கு
எதிர்முக வசுரர் தலைகளை யிடறும் எம் புரு டோத்தம னிருக்கை
சதுமுகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர்முக மணி கொண்டிழி புனல் கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-3 | பதவுரை Show / Hideசதுமுகன் கையில்,Sadhumugan Kaiyil - சதுர்முக ப்ரஹ்மாவினுடைய கையிலும் சதுப்புயன் தாளில்,Saduppuyan Thaalil - சதுப்புஜனான எம்பெருமானுடைய திருவடியிலும் (பின்பு) சங்கரன் சடையினில்,Sankaran Sadaiyinil - சிவபெருமானுடைய ஜடையிலும் தங்கி,Thangi - தங்கி, கதிர்,Kathir - ஒளியுடையனவும் மணி,Mani - ரத்னங்களை கொண்டு,Kondu - கொழித்துக் கொண்டு இழி,Ezhi - இழிகிற புனல்,Punal - தீர்த்தத்தை யுடைய கங்கை,Gangai - கங்கைக் கரையிலுள்ள கண்டமென்னும் கடிநகர்;,Kandamennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது அங்கு,Angu - உலகமளந்த அப்போது, அதிர் முகம் உடைய,Adhir Mugam Udaiya - முழங்கா நின்ற முகத்தை யுடைய வலம் புரி,Valam Puri - ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை குமிழ்த்தி,Kumizhthi - திருப் பவளத்தில் வைத்து ஊதியு“ அழலுமிழ்,Azhalumizh - நெருப்பை வீசா நின்றுள்ள ஆழி கொண்டு எறிந்து,Aazhi Kondu Erindhu - திரு வாழியை யெடுத்து விட்டெறிந்தும், எதிர் முகம்,Edhir Mugam - (போர் செய்வதாக) எதிர்த்த முகத்தை யுடைய அசுரர்,Asurar - அஸுரர்களுடைய தலைகளை,Thalaigalai - தலைகளை இடறும்,Edarum - உருட்டி யருளின எம் புருடோத்தான் இருக்கை,Em Purudhoaththaan Irukkai - எமது புருடோத்தமனுடைய வாஸஸ்தலமாகும். |