திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3948 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3948உபதேச ரத்னமாலை || 64
தன்னாரியனுக்குத் தானடிமை செய்தவன் இந்நாடு தன்னில் இருக்கும் நாள் -அந்நேர் அறிந்தும் அதில் ஆசை இன்றி யாசாரியனைப் பிரிந்து இருப்பார் ஆர் மனமே பேசு
பதவுரை Show / Hide
ஆசார்யன் பக்கலில் அர்த்தங்கள் கேட்கும் அளவே அவர்க்குக் கைங்கர்யம் பண்ண வேணும் -அர்த்தம் கேட்டுத் தலைக் கட்டினவாறே
வேறிடம் சென்று எங்கேனும் வாழலாம் என்று நினைப்பது தகுதி யன்று -ஆசார்யன் இந்த விபூதியில் எழுந்து அருளி இருக்கும் அளவும்
அனுதினமும் கைங்கர்யம் செய்தே சத்தை பெற வேணும் என்கிற சாஸ்த்ரார்தம் இதனால் காட்டி அருளுகிறார்