திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3949 | உபதேச ரத்னமாலை || 65 | ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் | பதவுரை Show / Hideஆசார்யரானவர் சிஷ்யனுடைய ஆத்மா ஸ்வரூபத்தை நோக்கி இருக்கக் கடவர் – ஸ்வரூப ஜ்ஞானம் ஆகிற தேஜஸ் பொருந்திய சிஷ்யனானாவன் -அவ்வாச்சார்யர் உடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை பக்தி உடன் பேணக் கடவன் என்கிற இந்த நுட்பமான விசேஷார்த்தத்தை ஸ்ரீ வசன பூஷணம் போன்றவற்றில் கேட்டு இருந்தாலும் கூட ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் -சிஷ்யன் ஆசாரியனுடைய தேஹத்தை பேணக் கடவன் – இரண்டும் இருவர்க்கும் ஸ்வரூபமாய் பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும் ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி -போன்றவற்றை கேட்டும் அவ்வழியில் நிஷ்டையோடு இருத்தல் எப்படிப் பட்டவர்களுக்கும் அருமைப் பட்டே இருக்கும் -எளிதன்று – |