திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3956 | உபதேச ரத்னமாலை || 72 | பூர்வாச்சார்யர்கள் போத மனுட்டானங்கள்
கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் -தேறி
இருள் தரும் மா ஞாலத்தே இன்புற்று வாழும்
தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து | பதவுரை Show / Hideபூர்வாசாரியர்களின் உடைய ஜ்ஞான அனுஷ்டானங்களை எடுத்துச் சொல்லுகின்ற மகான்களின் உடைய ஸ்ரீ சூக்திகளினால் நீங்கள் தெளிவு பெற்று நல்லறிவை -நிதியாகக் கொண்டு -உபகரித்து அருளவல்ல சிறந்த ஆசாரியரை அடி பணிந்து இவ்விருள் தரும் மா ஞாலத்திலே ஆனந்த நிர்ப்பரர்களாய் வாழுங்கோள். நலமந்த மில்லதோர் நாடாகவே தோற்றும் -இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் |