| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 402 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 1 | மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர் தோதவத்தித் தூய் மறையோர் துறை படியத் துளும்பி எங்கும் போதில் வைத்த தேன் சொரியும் புனலரங்க மென்பதுவே –4-8-1 | மறி,Mari - அலையெறியா நின்றுள்ள கடல்வாய் போய்,Kadalvaai Poi - கடலிற் புகுந்து மாண்டானை,Maandaanai - முதலைவாயி லகப்பட்டு உயிரொழிந்த மாதவத்தோன் புத்திரன்,Maadhavaththon Puththiran - மஹா தபஸ்வியான ஸாந்தீபிணியினுடைய பிள்ளையை ஒதுவித்த தக்கணையா,Othuvitha Thakkanaiyaa - (ஸாந்திபிகி தன்னை) அத்யாகம் பண்ணுவித்ததற்கு தக்ஷிணையாக உரு உருவே,Uru Uruve - (அப்புத்திரன் மரணமடையும் போதுள்ள ரூபம் மாறாதபடி) யதா ரூபமாக கொடுத்தான்,Koduththaan - (கொணர்ந்து) கொத்தருனின எம்பெருமானுடைய ஊர்,Oor - திருப்பதியாவது; தோதவத்தி,Thothavathi - பரிசுத்தமாகத் தோய்த்து உலர்த்தின வஸ்திரங்களை அணியா நிற்பவரும் தூய் மறையோர்,Thooy Maraiyoor - நிர்த்தோஷ ப்ரமாணமான வேதத்தைத் தமக்கு நிரூபகமாக வுடையவருமான ஸ்ரீவைஷ்ணவர்கள் துறை,Thurai - காவேரித் துறைகளில் படிய,Padiya - அவகாஹிக்க (அதனால்) எங்கும்,Engum - அக் காவேரி முழுதும் துளும்பி,Thulumbi - அலை மோதப் பெற்று (அதனால் தாமரை மலர்களின் கானங்கள் அலைய) போதில்,Pothil - (அந்தப்) பூக்களில் வைத்த,Vaiththa - இரா நின்றுள்ள தேன்,Then - தேனானது சொரியும்,Soriyum - பெருகப் பெற்ற புனல்,Punal - நீரை யுடைய அரங்கம் என்பது,Arangam Enbathu - திருவாங்கமென்னுந் திருப்பதியாம். |