| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 403 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 2 | பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும் இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர் மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார் வரு விருந்தை யளித்திருப்பார் சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்க மென்பதுவே–4-8-2 | பிறப்பு அகத்தே,Pirappu Agaththe - ஸூதிகா க்ருஹத்திலேயே மாண்டு ஒழிந்த,Maandu Ozhindha - இறந்தொழிந்த பிள்ளைகளை நால்வரயும்,Pillaigalai Naalvarayum - புத்திரர்கள் நால்வரையும் இறைப் பொழுதில்,Irai Pozhuthil - ஒரு நொடிப் பொழுதில் கொணர்ந்து,Konarndhu - (ஸ்ரீவைகுண்டத்தினின்றும்) கொண்டு வந்து கொடுத்து,Koduththu - மாதா பிதாக்கள் கையில் கொடுத்து ஒருப்படுத்த,Orupadutha - (இப் பிள்ளைகள் எம் பிள்ளைகள் தான் என்று) ஸம்மதி பண்ணுவித்த உறைப்பன்,Uraippan - சத்தியந்தன் (எழுந்தருளி யிருக்கிற) ஊர்,Oor - தீருப்பதியாவது: மறை,Marai - வேதங்களிற் கூறப்பட்டுள்ள (வைதிகமான) பொருந்தி,Porundhi - சிறந்த (மூன்று) அக்நிகளையும் வளர்த்து இருப்பவர்,Valarththu Irupavar - (அலிச்சிந்தமாக) வளர்த்துக் கொண்டிருப்பவர்களும் வரு,Varu - (தத்தம் திருமாலிகைக்கு) எழுந்தருளுகிற விருந்தை,Virundhai - அதிதிகளான ஸ்ரீவைஷ்ணவர்களை அளித்திருப்பவர்,Aliththirupavar - ஆதரித்துப்வோருமவர்களும் சிறப்பு உடைய,Sirappu Udaiya - (இப்படிப்பட்ட) உத்கர்ஷங்களை யுடையவர்களுமான மறையவர்,Maraiyavar - வைதிகர்கள் வாழ்,Vaazh - வாழப்பெற்ற திரு அரங்கம் என்பதுவே….,Thiru Arangam Enbathuve - திருவாங்கமென்னுந் திருப்பதியாம். |