Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 403 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
403ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 2
பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர்
மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார் வரு விருந்தை யளித்திருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்க மென்பதுவே–4-8-2
பிறப்பு அகத்தே,Pirappu Agaththe - ஸூதிகா க்ருஹத்திலேயே
மாண்டு ஒழிந்த,Maandu Ozhindha - இறந்தொழிந்த
பிள்ளைகளை நால்வரயும்,Pillaigalai Naalvarayum - புத்திரர்கள் நால்வரையும்
இறைப் பொழுதில்,Irai Pozhuthil - ஒரு நொடிப் பொழுதில்
கொணர்ந்து,Konarndhu - (ஸ்ரீவைகுண்டத்தினின்றும்) கொண்டு வந்து
கொடுத்து,Koduththu - மாதா பிதாக்கள் கையில் கொடுத்து
ஒருப்படுத்த,Orupadutha - (இப் பிள்ளைகள் எம் பிள்ளைகள் தான் என்று) ஸம்மதி பண்ணுவித்த
உறைப்பன்,Uraippan - சத்தியந்தன் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்,Oor - தீருப்பதியாவது:
மறை,Marai - வேதங்களிற் கூறப்பட்டுள்ள (வைதிகமான)
பொருந்தி,Porundhi - சிறந்த (மூன்று) அக்நிகளையும்
வளர்த்து இருப்பவர்,Valarththu Irupavar - (அலிச்சிந்தமாக) வளர்த்துக் கொண்டிருப்பவர்களும்
வரு,Varu - (தத்தம் திருமாலிகைக்கு) எழுந்தருளுகிற
விருந்தை,Virundhai - அதிதிகளான ஸ்ரீவைஷ்ணவர்களை
அளித்திருப்பவர்,Aliththirupavar - ஆதரித்துப்வோருமவர்களும்
சிறப்பு உடைய,Sirappu Udaiya - (இப்படிப்பட்ட) உத்கர்ஷங்களை யுடையவர்களுமான
மறையவர்,Maraiyavar - வைதிகர்கள்
வாழ்,Vaazh - வாழப்பெற்ற
திரு அரங்கம் என்பதுவே….,Thiru Arangam Enbathuve - திருவாங்கமென்னுந் திருப்பதியாம்.