திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 404 | பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 3 | மரு மகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தானூர்
திரு முகமாய்ச் செங்கமலம் திரு நிறமாய்க் கருங்குவளை
பொரு முகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே–4-8-3 | பதவுரை Show / Hideமருமகன் தன்,Marumagan Than - மருமகனான அபிமன்யுவினுடைய சந்ததியை,Sandhathiyai - புத்திரனான பரிஷித்தை உயிர் மீட்டு,Uyir Meettu - மறுபடியும் உயிர் மீட்டு மைத்துனன் மார்,Maiththunan Maar - மைத்துனன்னாரான பாண்டவர்களுடைய உரு,Uru - சரீரமானது மகத்து,Magaththu - (பாரதயத்தமாகிற) நரமேதத்திலே வீழாமே,Veezhamae - விழுந்து அழிந்து போகாதபடி குரு முகம் ஆய்,Guru Mugam Aay - ஆசார்ய ரூபியாய் (ஹித உபதேசங்களைப் பண்ணி) காத்தான்,Kaaththaan - ரக்ஷித்தருளிய கண்ணபிரானுடைய ஊர்,Oor - திருப்பதியாவது: செம் கமலம்,Sem Kamalam - செந்தாமரை மலர்களானவை திரு முகம் ஆய்,Thiru Mugam Aay - (பெரிய பெருமாளுடைய) திருமுகத்துக்குப் போலியாகவும் கரு குவளை,Karu Kuvalai - நீலோத்பல புஷ்பங்கள் திரு நிறம் ஆய்,Thiru Niram Aay - திருமேனி நிறத்துக்குப் போலியாகவும் பொரு முகம் ஆய் நின்று,Poru Mugam Aay Nindru - (ஒன்றுக் கொன்று) எதிர் பொருகிற முகத்தை யுடைத்தாய் கொண்டு அலரும்,Alarum - நீர்வளத்தையுடைய புனல்,Punal - நீர் வளத்தை யுடைய அரங்கம் என்பது |