| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 405 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 4 | கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள் வாய்க் கடிய சொல் கேட்டு ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிய கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தானூர் தேந்தொடுத்த மலர்ச் சோலைத் திருவரங்க மென்பதுவே–4-8-4 | கூன்,Koon - கூனைவுடைய தொழுத்தை,Thozhuththai - வேலைக்காரியாகிய மந்தரை யானவள் சிதகு,Sithagu - (ஸ்ரீராமபட்டாபிஷேக மஹோத்வசத்துக்கு விநாசகமான தீய சொற்களை உரைப்ப,Uraippa - சொல்ல (அச் சொற்களை அங்கீகரித்துக் காட்டுக்கு எழுந்தருளச் சொன்ன) கொடியவள்,Kodiaval - மஹா க்ரூரையான கைகேயியினுடைய வாய்,Vaai - வாயிலுண்டான கடிய சொல்லைக் கேட்டு,Kadiya Sollai Kaettu - கடினமான சொல்லைக் கேட்டு ஈன்று எடுத்து தாயாரையும்,Eenru Eduththu Thaayaraiyum - (தன்னைப்) பெற்று வளர்த்த தாயான ஸ்ரீகௌஸலையாரையும் இராச்சியமும்,Iraachchiyamum - ராஜ்யத்தையும் ஆங்கு ஒழிய,Aangu Ozhia - கைவிட்டு தொழத்தை,Thozhaththai - அடிமைப் பெண் தாயார்,Thaayaar - பூஜையிற்பன்மை கண்டகர்,Kandhagar - முள்ளைப் போன்றவர் கான் தொடுத்த நெறி போகி,Kaan Thoduththa Neri Pogi - காடுகள் அடர்ந்திரா நின்றுள்ள வழியே (ஸ்ரீதண்டகாரணியத்திற்கு) எழுந்தருளி கண்டகரை,Kandhagarai - (முனிவர்களுக்கு) முள் போலப் பாதகராயிருந்த (ஜநஸ்தாந வாசிகளான ராக்ஷஸரை களைந்தான்,Kalaindhaan - நிரஸித்தருளின எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற) ஊர்,Oor - திருப்பதி யாவது தேன் தொடுத்த மலர்,Then Thoduththa Malar - தேன் மாறாத மலர்களை யுடைய சோலை,Solai - சோலைகளை யுடைத்தான திரு அரங்கம் என்பது.,Thiru Arangam Enpathu - திருவாங்கமென்னுந் திருப்பதியாம். |