Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 405 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
405ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 4
கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள் வாய்க் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிய
கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தானூர்
தேந்தொடுத்த மலர்ச் சோலைத் திருவரங்க மென்பதுவே–4-8-4
கூன்,Koon - கூனைவுடைய
தொழுத்தை,Thozhuththai - வேலைக்காரியாகிய மந்தரை யானவள்
சிதகு,Sithagu - (ஸ்ரீராமபட்டாபிஷேக மஹோத்வசத்துக்கு விநாசகமான தீய சொற்களை
உரைப்ப,Uraippa - சொல்ல (அச் சொற்களை அங்கீகரித்துக் காட்டுக்கு எழுந்தருளச் சொன்ன)
கொடியவள்,Kodiaval - மஹா க்ரூரையான கைகேயியினுடைய
வாய்,Vaai - வாயிலுண்டான
கடிய சொல்லைக் கேட்டு,Kadiya Sollai Kaettu - கடினமான சொல்லைக் கேட்டு
ஈன்று எடுத்து தாயாரையும்,Eenru Eduththu Thaayaraiyum - (தன்னைப்) பெற்று வளர்த்த தாயான ஸ்ரீகௌஸலையாரையும்
இராச்சியமும்,Iraachchiyamum - ராஜ்யத்தையும்
ஆங்கு ஒழிய,Aangu Ozhia - கைவிட்டு
தொழத்தை,Thozhaththai - அடிமைப் பெண்
தாயார்,Thaayaar - பூஜையிற்பன்மை
கண்டகர்,Kandhagar - முள்ளைப் போன்றவர்
கான் தொடுத்த நெறி போகி,Kaan Thoduththa Neri Pogi - காடுகள் அடர்ந்திரா நின்றுள்ள வழியே (ஸ்ரீதண்டகாரணியத்திற்கு) எழுந்தருளி
கண்டகரை,Kandhagarai - (முனிவர்களுக்கு) முள் போலப் பாதகராயிருந்த (ஜநஸ்தாந வாசிகளான ராக்ஷஸரை
களைந்தான்,Kalaindhaan - நிரஸித்தருளின எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்,Oor - திருப்பதி யாவது
தேன் தொடுத்த மலர்,Then Thoduththa Malar - தேன் மாறாத மலர்களை யுடைய
சோலை,Solai - சோலைகளை யுடைத்தான
திரு அரங்கம் என்பது.,Thiru Arangam Enpathu - திருவாங்கமென்னுந் திருப்பதியாம்.