Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 406 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
406ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 5
பெரு வரங்களவை பற்றிப் பிழகுடைய இராவணனை
உருவரங்கப் பொருதழித்து இவ் வுலகினைக் கண் பெறுத்தானூர்
குருவரும்பக் கோங்கலரக் குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்க மென்பதுவே என் திருமால் சேர்விடமே–4-8-5
குரவு,Kuravu - குரவ மரங்களானவை
அரும்ப,Arumba - அரும்பு விடா நிற்க
கோங்கு,Kongu - கோங்கு மரங்களானவை
அலரா,Alaraa - அலரா நிற்க.
குயில்,Kuyil - குயில்களானவை
கூவும்,Koovum - (களித்துக்) கூவும்படியான
குளிர் பொழில் சூழ்,Kulir Pozhil Soozh - குளிர்ந்த சோலைகளாலே சூழப் பெற்ற
திரு அரங்கம் என்பது,Thiru Arangam Enpathu - திருவரங்கமென்னும் திருப்பதியானது;
பெரு வரங்களவை ,Peru Varangalavai - பெருமை பொருந்திய வரங்களை
பற்றி,Patri - பலமாகக் கொண்டு
பிழக்கு உடைய,Pizhakku Udaiya - (தேவர் முனிவர் முதலாயினோரிடத்துப்) பிழை செய்கையையே இயல்பாக வுடைய
இராவணனை,Eraavananai - இராவணனுடைய
உரு,Uru - உடலானது
மங்க,Mangga - சிந்நபிந்நமாம்படி
பொருது அழித்து,Porudhu Azhiththu - போர் செய்து (அவனைத்) தொலைத்த
இ உலகினை,E Ulaginai - இந்த லோகத்தை
கண் பெறுத்தான்,Kan Peruththaan - காத்தருளினவனும்
என்,En - எனக்குத் தலைவனும்
திருமால்,Thirumaal - ச்ரிய: பதியுமான எம்பெருமான்
சேர்வு இடம்,Saarvu Idam - சேருமிடாகிய
ஊர்,Oor - திருப்பதியாம்