| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 406 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 5 | பெரு வரங்களவை பற்றிப் பிழகுடைய இராவணனை உருவரங்கப் பொருதழித்து இவ் வுலகினைக் கண் பெறுத்தானூர் குருவரும்பக் கோங்கலரக் குயில் கூவும் குளிர் பொழில் சூழ் திருவரங்க மென்பதுவே என் திருமால் சேர்விடமே–4-8-5 | குரவு,Kuravu - குரவ மரங்களானவை அரும்ப,Arumba - அரும்பு விடா நிற்க கோங்கு,Kongu - கோங்கு மரங்களானவை அலரா,Alaraa - அலரா நிற்க. குயில்,Kuyil - குயில்களானவை கூவும்,Koovum - (களித்துக்) கூவும்படியான குளிர் பொழில் சூழ்,Kulir Pozhil Soozh - குளிர்ந்த சோலைகளாலே சூழப் பெற்ற திரு அரங்கம் என்பது,Thiru Arangam Enpathu - திருவரங்கமென்னும் திருப்பதியானது; பெரு வரங்களவை ,Peru Varangalavai - பெருமை பொருந்திய வரங்களை பற்றி,Patri - பலமாகக் கொண்டு பிழக்கு உடைய,Pizhakku Udaiya - (தேவர் முனிவர் முதலாயினோரிடத்துப்) பிழை செய்கையையே இயல்பாக வுடைய இராவணனை,Eraavananai - இராவணனுடைய உரு,Uru - உடலானது மங்க,Mangga - சிந்நபிந்நமாம்படி பொருது அழித்து,Porudhu Azhiththu - போர் செய்து (அவனைத்) தொலைத்த இ உலகினை,E Ulaginai - இந்த லோகத்தை கண் பெறுத்தான்,Kan Peruththaan - காத்தருளினவனும் என்,En - எனக்குத் தலைவனும் திருமால்,Thirumaal - ச்ரிய: பதியுமான எம்பெருமான் சேர்வு இடம்,Saarvu Idam - சேருமிடாகிய ஊர்,Oor - திருப்பதியாம் |