| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 407 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 6 | கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே ஆழி விடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர் தாழை மடலூடுரிஞ்சித் தவள வண்ணப் பொடி யணிந்து யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே–4-8-6 | கீழலகில்,Keezhlagil - பாதாள லோகத்திலுள்ள அசுரர்களை,Asuraralai - அஸுரர்களை கிழக்க இருந்து,Kizhakka Irundhu - அடக்கிடந்து கிளராமே,Kilaramae - கிளம்ப வொட்டாதபடி ஆழி விடுத்து,Aazhi Viduththu - திருவாழியாழ்வானை ஏவி அவருடைய,Avarudaiya - அவ் வசுரர்களுடைய கரு,Karu - கர்ப்பந்தமாக அழித்த,Azhiththa - அழித்தருளினதாலும் அழிப்பன்,Azhippan - சத்ருக்களைத் தொலைத் தருளுவதையே இயல்பாக வுடையவனுமான எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற) ஊர்,Oor - திருப்பதி யாவது: யாழ்,Yaazh - (வீணையினுடைய ஓசை போன்ற) இன் ஓசை,In Osai - இனிய இசையையுடைய வண்டு இனங்கள்,Vandu Inangal - வண்டுகளின் திரள்களானவை தாமழை மடலூடு,Thaamazhai Madaloodu - (மலரத் தொடங்குகிற) தாழை மடல் முன்னே உறிஞ்சி,Urinji - உடம்பை உரசிக் கொண்டு (புகுந்து) தவள வண்ணப் பொடி,Thavala Vannapp Podi - (அம்மடலிலுள்ள)வெளுத்த நிறத்தையுடைய வண்ணத்தை அணிந்து,Aninthu - உடம்படங்கலும் அணிந்து கொண்டு ஆளம் வைக்கும்,Aalam Vaikkum - (அந்தக் களிப்பிலே) தெனதென என்று ஆளத்தி வைத்து பணிமிடமான அரங்கம்,Arangam - திருவரங்கம் |