Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 407 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
407ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 6
கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே
ஆழி விடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர்
தாழை மடலூடுரிஞ்சித் தவள வண்ணப் பொடி யணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே–4-8-6
கீழலகில்,Keezhlagil - பாதாள லோகத்திலுள்ள
அசுரர்களை,Asuraralai - அஸுரர்களை
கிழக்க இருந்து,Kizhakka Irundhu - அடக்கிடந்து
கிளராமே,Kilaramae - கிளம்ப வொட்டாதபடி
ஆழி விடுத்து,Aazhi Viduththu - திருவாழியாழ்வானை ஏவி
அவருடைய,Avarudaiya - அவ் வசுரர்களுடைய
கரு,Karu - கர்ப்பந்தமாக
அழித்த,Azhiththa - அழித்தருளினதாலும்
அழிப்பன்,Azhippan - சத்ருக்களைத் தொலைத் தருளுவதையே இயல்பாக வுடையவனுமான எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்,Oor - திருப்பதி யாவது:
யாழ்,Yaazh - (வீணையினுடைய ஓசை போன்ற)
இன் ஓசை,In Osai - இனிய இசையையுடைய
வண்டு இனங்கள்,Vandu Inangal - வண்டுகளின் திரள்களானவை
தாமழை மடலூடு,Thaamazhai Madaloodu - (மலரத் தொடங்குகிற) தாழை மடல் முன்னே
உறிஞ்சி,Urinji - உடம்பை உரசிக் கொண்டு (புகுந்து)
தவள வண்ணப் பொடி,Thavala Vannapp Podi - (அம்மடலிலுள்ள)வெளுத்த நிறத்தையுடைய வண்ணத்தை
அணிந்து,Aninthu - உடம்படங்கலும் அணிந்து கொண்டு
ஆளம் வைக்கும்,Aalam Vaikkum - (அந்தக் களிப்பிலே) தெனதென என்று ஆளத்தி வைத்து பணிமிடமான
அரங்கம்,Arangam - திருவரங்கம்