திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 408 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
408பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 7
கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர் தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு தெழிப்புடைய காவிரி வந்து அடி தொழும் சீரரங்கமே–4-8-7
பதவுரை Show / Hide
கொழுப்பு உடைய,Kozhuppu Udaiya - கொழுப்பை யுடையதும்
செழு,Sezhu - செழுமை தங்கியதுமான
குருதி,Kurudhi - ரத்தமானது
கொழித்து,Kozhiththu - ஊற்று மாறாமல் கிளர்ந்து
இழிந்து,Izhindhu - நிலத்தில் பரவி
குமிழ்ந்து,Kumizhndhu - குமிழி கிளம்பி
பிழக்கு உடைய,Pizhakku Udaiya - (பர ஹிம்சையாகிய) தீமைகளைச் செய்கிற
அசுரர்களை,Asuraralai - அஸுரர்களை
பிணம் படுத்த,Pinam Paduththa - பிணமாக்கி யருளின
பெருமான்,Perumaan - எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்,Oor - திருப்பதியானது:
தழுப்பு அரிய,Thazhuppu Ariya - (ஒருவரிருவரால்) தழுவ முடியாத
சந்தனங்கள்,Santhanangal - சந்தந மரங்களை
தடவரைவாய்,Thadavarai Vaai - பெரியமலைகளினின்று
ஈர்த்துக் கொண்டு,Eerththuk Kondu - (வேரோடே பிடுங்கி) இழுத்துக் கொண்டு வந்து
தெழிப்பு உடைய,Thezhippu Udaiya - (இவற்றைத் திருவுள்ளம் பற்றவேணும் என்று எம்பெருமானைப் பிராரத்திக்கின்றதோ என்னலாம்படி) இரைச்சலை யுடைய
காவிரி,Kaaviri - திருக்காவேரி நதியானது
அடி தொழும்,Adi Thozhum - (எம்பெருமானது) திருவடிகளைத் தொழுகையாகிற
சீர்,Seer - சீர்மையைப் பெற்ற
அரங்கம்,Arangam - திருவரங்க நகராம்.