திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 41 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
41பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 19
மண்ணும் மலையும் கடலும் உலகேழும் உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை திண்ணம் இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே–1-2-18
பதவுரை Show / Hide
மண்ணும்,Mannum - பூமியையும்
மலையும்,Malayum - மலைகளையும்
கடலும்,Kadalum - கடல்களையும்
உலகு எழும்,Ulagu ezhum - ஸப்தலோகங்களையும்
உண்ணுந்திறந்து,Unnundhirandhu - திருவயிற்றிலே வைக்கிறவளவில்
மகிழ்ந்து,Magizhndhu - உகந்து
உண்ணும்,Unnum - திருவயிற்றிலே வைத்த
பிள்ளைக்கு,Pillaiyukku - (இக்) கண்ணபிரானுடையதான
எழில் வண்ணம் கொள்,Ezhil vannan kol - அழகிய நிறங்கொண்ட
மகரம் குழை இவை,Magaram kuzai ivai - இம்மகர குண்டலங்களின்
திண்ணம் இருந்த காணீரே,Thinnam irundha kaaneere - திண்மை இருந்தபடியை காணீர்
சேயிழையீர்! காணீரே,Seyizhaiyeer! Kaaneere - சேயிழையீர்! வந்து காணீர்!!