| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 410 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 9 | குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல் நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமாலூர் குன்றாடு பொழில் நுழைந்து கொடியிடையார் முலை யணவி மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே–4-8-9 | குன்று ஆடு,Kundru Aadu - மலையினுச்சியிற் சார்ந்த கொழு முகில் போல்,Kozhu Mugil Pol - நீர் நிறைந்த மேகம் போலவும் குவளைகள் போல்,Kuvalaigal Pol - கரு நெய்தல் பூப்போலவும் குரை,Kurai - ஒலி செய்யா நின்ற கடல்போல்,Kadal Pol - கடல்போலவும் நின்று ஆடு,Nindru Aadu - (களிப்பாலே) நின்று ஆடா நின்றுள்ள மயில் கணம் போல்,Mayil Kanam Pol - மயில்களின் திரள்போலவும் (இரா நின்ற) நிறம் உடைய,Niram Udaiya - வடிவழகை யுடையவனான நெடுமால்,Nedumaal - எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற) ஊர்,Oor - திருப்பதி யாவது தென்றல்,Thendral - தென்றல் காற்றானது குன்று,Kundru - (மலய) பர்வதத்திலுள்ள பொழிலூடு,Pozhiloodu - சோலைகளினிடையிலே அழைத்து,Azaiththu - அழைத்து கொடி இடையார்,Kodi Idaiyaar - (அங்குள்ள பூத்களின் தாதுகளை அனைத்து பரிமளத்தைக் கொய்து கொண்டு) கொடி போன்ற இடையை யுடையரான பெண்களினுடைய முலை,Mulai - (கலவைச் சாந்தணிந்த) முலைகளை அணவி,Anavi - வியாபித்து மன்றூடு,Mandru Oodu - (அந்தப் பரிமளத்துடனே) நாற்சந்திகளினூடே உலாம்,Ulaam - உலாவப் பெற்ற மதிள் அரங்கம் என்பது |