| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 411 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 10 | பரு வரங்களவை பற்றிப் படையாலித் தெழுந்தானை செரு வரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதி மேல் திருவரங்கத் தமிழ் மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு இருவரங்க மெரித்தானை ஏத்த வல்லா ரடியோமே-4-8-10 | பருவரங்கள் அளை பற்றி,Paruvarangal Alai Patri - பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற பெரிய வரங்களைப் பலமாகக் கொண்டு படை ஆலித்து எழுந்தானை,Padai Aaliththu Ezhundhaanai - யுத்த விஷயமாகக் கோலாஹலஞ் செய்து வெளிப் புறப்பட்ட இராவணனை செரு,Seru - யுத்தத்திலே அரங்க,Aranga - ஒழியும்படி பொருது,Porudhu - போர் செய்து அழித்த,Azhiththa - ஒழித்தருளின திருவாளன்,Thiruvaalan - (வீர்யமாகிற) லக்ஷ்மியைத் தனக்கு நிருபகமாக உடையனான எம்பெருமானுடைய திருப்பதி மேல்,Thiruppathi Mel - (திருவரங்கமென்னும்) திருப்பதி விஷமாக விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார் விரித்தன,Viriththana - அருளிச் செய்த திரு அரங்கம் தமிழ் மாலை கொண்டு,Thiru Arangam Tamil Maalai Kondu - (பாட்டுத் தோறு ம்) ‘திருவரங்கம்’ என்கிற திருநாமத்தையுடைய தமிழ் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையுங்கொண்டு. இருவர் அங்கம் மெரித்தானை,Iruvar Angam Meriththaanai - (மதுகைடபர்களாகிற) இருவருடைய உடலைத் (திருவனந்தாழ்வானுடைய மூச்சு வெப்பத்தினால்) கொளுத்திப் போகட்ட எம்பெருமானை ஏத்தவல்லார்,Eaththavallaar - துதிக்க வல்லவர்களுக்கு அடியோம்,Adiyom - அடிமை செய்யக்கடவோம். |