| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 413 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (இரண்டாம் பாட்டு – புருஷகார பூதையான பிராட்டி தானே சிதகுரைக்கிலும் -அவளோடு மறுதலித்து நின்று ஆஸ்ரிதரை ரஷித்து அருளும் ஸ்ரீ பெரிய பெருமாள் குணத்தை அருளிச் செய்து -இப்படி இருக்கிற இவர்க்கு ஒழிய வேறு ஒருவர்க்கு ஆளாவாரோ என்கிறார்.) 2 | தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே –4-9-2 | தன் அடியார் திறத்தகத்து,Than Adiyaar Thiraththagathu - தன்னுடைய (எம்பெருமானுடைய) அடியவர்கள் விஷயத்தில் தாமரையாள் ஆகிலும்,Thaamaraiyaal Aagilum - (புருஷகாரம் பண்ணக்கடவளான) பெரியபிராட்டியார்தாமே சிதகு,Sithagu - குற்றங்களை உரைக்கும் என்,Uraikkum En - கணக்கிட்டுச் சொல்லத் தொடங்கினாலும் என் அடியார்,En Adiyaar - “எனக்கு அடிமைப்பட்டவர்கள் அது,Adhu - அக்குற்றங்களை செய்யார்,Seiyaar - செய்யமாட்டார்கள்; செய்தார் என்,Seithaar En - (செய்தகுற்றத்தைப் பொறுப்பதற்கு எம்பெருமானுண்டு என்று சிலவற்றைச் செய்தார்களாயினும் நன்றி செய்தார் என்பர்,Nandri Seithaar Enbar - (அவர்கள்) நன்மையையே செய்தார்களத்தனை” என்று சொல்லா நிற்பவரும், மன் உடைய,Man Udaiya - ஐச்வரியம் பொருந்திய விபீடணற்கா,Vibeedanarkaa - விபீஷணாழ்வானுக்காக மதிள் இலங்கை திசை நோக்கி,Mathil Ilangai Thisai Nookki - மதிளையுடைய லங்கையின் முகமாக மலர்கண் வைத்த,Malarkan Vaitha - மலர்ந்த திருக்கண்களை வைத்தருளினவனும் என்னுடைய,Ennudaiya - எனக்கு ஸ்வாமியுமான திரு அரங்கற்கு அன்றியும்,Thiru Arangarku Andriyum - பெரிய பெருமாளையொழிய மற்று ஒருவர்க்கு,Matru Oruvarkku - வேறொருவர்க்கு ஆள் ஆவரே,Aal Aavare - ஆட்படுவோர் ஆரேனுமண்டோ. |