Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 414 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
414ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (மூன்றாம் பாட்டு விரோதி நிரசன சீலனாய் -அடியார் ஆனவர்களை புநராவர்த்தி இல்லாதபடி ஸ்ரீ பரம பதத்தில் கொடு போய் வைத்து அடிமை கொள்ளுமவன் வர்த்திக்கும் தேசம் இது என்கிறார்) (ஏணி வாங்கி-தன்னுடைய உபாய பாவம் தவிர்த்து புருஷார்த்தம் பகவத் அனுபவம் அருளுவானே ) 3
கருளுடைய பொழில் மருதம் கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும்
உருளுடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டோசை கேட்டான்
இருளகற்றும் எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆள்கொள்வான் அமருமூர் அணி அரங்கமே –4-9-3
கருள் உடை,Karul Udai - (கிருஷ்ணனை நலிய வேணும் என்கிற) சீற்றத்தையுடையதும்
பொழில்,Pozhil - (மன விழுப்புண்ணும்படி புறம்பே) சோலை செய்து நிற்பதுமான
மருதும்,Marudhum - (இரட்டை) மருத மரங்களையும்
சதம்,Satham - மிக்க கோபத்தையுடைய
களிறும்,Kalirum - குலையாபீடத்தையும்
பிலம்பளையும்,Pilampalaiyum - ப்ரலம்பாஸுரனையும்
கடிய,Kadiya - மிகவும் க்ரூரான
மாவும்,Maavum - குதிரை வடிவாய் வந்த நேசியையும்
உருள் உடைய,Urul Udaiya - உருண்டுவந்த
சகடினையாய்,Sakadinaiaay - சகடாஸுரனையும்
மல்லரையும்,Mallaraiyum - மல்லர்களையும்
உடையவிட்டு,Udaiyavittu - நிரஹித்தருளி
ஓசை கேட்ட என்,Osai Ketta En - கீர்த்திபெற்றவனும்
இருள் அகற்றும்,Irul Agatrum - இருளைப் போக்காநின்ற
எறிகதிரேசன்,Erikathiresan - வீசுகின்ற கிரணங்களையுடையனான ஸூர்யனுடைய
மண்டலத்தூடு,Mandalaththuudu - மண்டலத்தினுள்ளே
அடியவரை,Adiyavarai - அடியார்களை
ஏற்றி,Eatri - ஏறச்செய்து
வைத்து,Vaiththu - (அங் கு நின்றும் அர்ச்சிராதி மார்க்கமாகப் பரமபதத்திற்குக் கொண்டுபோய்)(அங்கு அவர்களை) நிறுத்தி
ஏணி வாங்கி,Eani Vaangi - தன்னுடைய உபாயத்வரகாரத்தைத் தவிர்த்து
அருள் கொடுத்திட்டு,Arul Koduththittu - (அவர்கள் அவ்விடத்தில் நின்றும் மீளாமைக்கும் கைங்கரிய லாபத்திற்கு முறுப்பாக அவர்கள் பக்கல்) க்ருபைபண்ணி
ஆட் கொள்வான்,Aat Kolvaan - அடிமை கொள்ளுமவனுமான எம்பெருமாள்
அமரும்,Amarum - பொருந்தி எழுந்தருளியிருக்கிற
ஊர்,Oor - திருப்பதியாவது
அணி அரங்கம்,Ani Arangam - அழகிய திருவரங்கமாம்.