திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 418 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
418பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (ஏழாம் பாட்டு-ஸ்ரீ வாமனனாய் மாவலியை குறும்பதக்கி-ராஜ்யத்தை வாங்கி -அவனை பாதாளத்திலே வைத்தவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார்.) 7
குறள் பிரமசாரியாய் மாவலியை குறும்பதக்கி அரசு வாங்கி இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த வெம்மான் கோயில் எறிப்புடைய மணி வரைமேல் இள நாயிறு எழுந்தால் போல் அரவணையின் வாய்ச் சிறப்புடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே –4-9-7
பதவுரை Show / Hide
குறள் பிரம சாரி ஆய்,Kural Brama Saari Aay - வாமக ப்ரஹ்மசாரியாய் (எழுந்தருளி)
பக வலிமை,Paga Valimai - மஹாபலியினடைய
குறும்பு அதக்கி,Kurumbu Athakki - செருக்கை அடக்கி
அரசு,Arasu - (அவனுடைய) ராஜ்யமாயிருந்த பக்ஷமியை
வாங்கி,Vaangi - (தன்னுடையதாம் படி நீரேற்றுப்) பெற்று
இறைப் பொழுதில்,Iraip Pozhudil - க்ஷணகாலத்துக்குள்
பாதாளம்,Paadhaalam - பாதாளலோகத்தை
கலவிருக்கை கொடுத்து,Kalavirukkai Koduththu - (அவனுக்கு) இருப்பிடமாகக் கற்பித்து
உதந்த,Uthantha - (இந்திரன் வேண்டுகோளைத் தலைக்கட்டினோம் என்று) மகிழ்நத
எம்மான்,Emmaaan - எமது தலைவனான எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
கோயில்,Koyil - கோயிலாவது
எறிப்பு உடைய,Erippu Udaiya - மிக்க ஒளியையுடைய
மணி வரை மேல்,Mani Varai Mel - நீலரத்ந பர்வதத்தின்மேல்
இள ஞாயிறு,Ila Nyaayiru - காலஸூரியர்கள்
எழுந்தால் போல்,Ezhundhaal Pol - உதித்தாற்போல
அறவு அணை பின் வாய்,Aravu Anai Pin Vaai - திருவனந்தாழ்வானிடத்து
சிறப்பு உடைய,Sirappu Udaiya - அழகு பொருந்திய
பணங்கள் மிக,Panangal Miga - படங்களின்மேல்
செழு மணிகள்,Sezhu Manigal - செழுமை தங்கிய ரத்னங்களானவை
விட்டு எறிந்தும்,Vittu Erindhum - மிகவும் ஜ்வலியா நிற்கப்பெற்ற
திரு அரங்கம்,Thiru Arangam - திருவரங்கமாம்