Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 42 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
42ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 20
அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கு மார்ப்ப
மழகன் றினங்கள் மறித்துத் திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-20
அழகிய,Azhagiya - அழகியதும்
பைம் பொன்னின்,Paim ponnin - பசும் பொன்னால் செய்யப்பட்டதுமான
கோல்,Kol - மாடு மேய்க்குங் கோலை
அம் கை,Am kai - அழகிய கையிலே
கொண்டு,Kondu - பிடித்துக் கொண்டு
கழல்கள்,Kazhagal - (கால்களிலுள்ள) வீரக் கழல்களும்
சதங்கை,Sathangai - சதங்கைகளும்
கலந்து,Kalanndhu - தன்னிலே சேர்ந்து
எங்கும் ஆர்ப்ப,Engum aarpa - போமிடமெல்லா மொலிக்க
மழ,Mazha - இளமை பொருந்திய
கன்று இனங்கன்,Kanru inankan - கன்றுகளின் திரள்களை
மறித்து,Mariththu - (கை கழியப் போகாமல் மடக்கி)
திரிவான்,Thirivaan - திரியுமவனான கண்ணபிரானுடைய
குழல்கள் இருந்தவா காணீரே,Kuzhalgal irundhavaa kaaneere - திருக் குழல்களானவை இருந்த ஆ காணீர்!
குவி முலையீர் வந்து காணீரே,Kuvi mulaiyeer vandhu kaaneere - குவி முலையீர்! வந்து காணீர்!!