| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 42 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 20 | அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு கழல்கள் சதங்கை கலந்து எங்கு மார்ப்ப மழகன் றினங்கள் மறித்துத் திரிவான் குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-20 | அழகிய,Azhagiya - அழகியதும் பைம் பொன்னின்,Paim ponnin - பசும் பொன்னால் செய்யப்பட்டதுமான கோல்,Kol - மாடு மேய்க்குங் கோலை அம் கை,Am kai - அழகிய கையிலே கொண்டு,Kondu - பிடித்துக் கொண்டு கழல்கள்,Kazhagal - (கால்களிலுள்ள) வீரக் கழல்களும் சதங்கை,Sathangai - சதங்கைகளும் கலந்து,Kalanndhu - தன்னிலே சேர்ந்து எங்கும் ஆர்ப்ப,Engum aarpa - போமிடமெல்லா மொலிக்க மழ,Mazha - இளமை பொருந்திய கன்று இனங்கன்,Kanru inankan - கன்றுகளின் திரள்களை மறித்து,Mariththu - (கை கழியப் போகாமல் மடக்கி) திரிவான்,Thirivaan - திரியுமவனான கண்ணபிரானுடைய குழல்கள் இருந்தவா காணீரே,Kuzhalgal irundhavaa kaaneere - திருக் குழல்களானவை இருந்த ஆ காணீர்! குவி முலையீர் வந்து காணீரே,Kuvi mulaiyeer vandhu kaaneere - குவி முலையீர்! வந்து காணீர்!! |