| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 420 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (ஒன்பதாம் பாட்டு – தசாவதாரமாய் கொண்டு ஜகத் ரஷணம் பண்ணுமவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம் இது என்கிறார்.) 9 | தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய் மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில் சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே –4-9-9 | தேவு உடைய,Thevu Udaiya - தேஜஸ்ஸையுடைய மீனம் ஆய்,Meenam Aay - மத்ஸ்யமாயும் ஆமை ஆய்,Aamai Aay - கூர்மமாயும் எனம் ஆய்,Enam Aay - வராஹமாயும் அரி ஆய்,Ari Aay - நரஸிம்ஹமாயும் குறள் ஆய்,Kural Aay - வாமனாயும் மூ உருவின் இராமன் ஆய்,Moo Uruvin Iraaman Aay - பரசுராமனாயும், தசரதராமனாயும், பலராமனாயும், கண்ணன் ஆய்,Kannan Aay - ஸ்ரீகிருஷ்ணனாயும் கற்கி ஆய்,Karki Aay - கல்கியாயும் (திருவலதாரங்களெடுத்து) முடிப்பான்,Mudippaan - (விரோதிகளை) ஒழிக்கவல்ல எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற) கோயில்,Koyil - கோயிலாவது; பெடை அன்னம்,Pedai Annam - அன்னப்பேடையான சேவலொடு,Sevalodu - (தனமு) புருஷஹம்ஸத்தோடு கூடுகிற செம் கமலம் மலர் ஏறி,Sem Kamalam Malar Eri - செந்தாமரைப் பூவின் மேலேறி ஊசல் ஆடி,Oosal Aadi - (அம்மலரை அசைத்து ஊசலாடி பூ அணை மேல்,Poo Anai Mel - புஷ்ப சயகத்தின் துதைந்து,Thudhaindhu - (ஒன்றோடொன்று புணருகையாகிற) நெருக்கத்தைச் செய்து எழு,Ezh - (அதனால்) கிளர்ந்த செம்பொடி ஆடி,Sempodi Aadi - (கண்ணமாகிற) சிவந்த பொடியில் மூழ்கி விளையாடும்,Vilaiyaadum - விளையாடா நிற்கப்பெற்ற புனல்,Punal - நீர்வளத்தை யுடைய அரங்கம்,Arangam - திருவரங்க நகராம். |