Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 420 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
420ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (ஒன்பதாம் பாட்டு – தசாவதாரமாய் கொண்டு ஜகத் ரஷணம் பண்ணுமவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம் இது என்கிறார்.) 9
தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே –4-9-9
தேவு உடைய,Thevu Udaiya - தேஜஸ்ஸையுடைய
மீனம் ஆய்,Meenam Aay - மத்ஸ்யமாயும்
ஆமை ஆய்,Aamai Aay - கூர்மமாயும்
எனம் ஆய்,Enam Aay - வராஹமாயும்
அரி ஆய்,Ari Aay - நரஸிம்ஹமாயும்
குறள் ஆய்,Kural Aay - வாமனாயும்
மூ உருவின் இராமன் ஆய்,Moo Uruvin Iraaman Aay - பரசுராமனாயும், தசரதராமனாயும், பலராமனாயும்,
கண்ணன் ஆய்,Kannan Aay - ஸ்ரீகிருஷ்ணனாயும்
கற்கி ஆய்,Karki Aay - கல்கியாயும் (திருவலதாரங்களெடுத்து)
முடிப்பான்,Mudippaan - (விரோதிகளை) ஒழிக்கவல்ல எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
கோயில்,Koyil - கோயிலாவது;
பெடை அன்னம்,Pedai Annam - அன்னப்பேடையான
சேவலொடு,Sevalodu - (தனமு) புருஷஹம்ஸத்தோடு கூடுகிற
செம் கமலம் மலர் ஏறி,Sem Kamalam Malar Eri - செந்தாமரைப் பூவின் மேலேறி
ஊசல் ஆடி,Oosal Aadi - (அம்மலரை அசைத்து ஊசலாடி
பூ அணை மேல்,Poo Anai Mel - புஷ்ப சயகத்தின்
துதைந்து,Thudhaindhu - (ஒன்றோடொன்று புணருகையாகிற) நெருக்கத்தைச் செய்து
எழு,Ezh - (அதனால்) கிளர்ந்த
செம்பொடி ஆடி,Sempodi Aadi - (கண்ணமாகிற) சிவந்த பொடியில் மூழ்கி
விளையாடும்,Vilaiyaadum - விளையாடா நிற்கப்பெற்ற
புனல்,Punal - நீர்வளத்தை யுடைய
அரங்கம்,Arangam - திருவரங்க நகராம்.