Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 421 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
421ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (பத்தாம் பாட்டு – சர்வ நிர்வாஹகனாய் -ஸ்ரீயபதி யானவன் சரசமாக கண் வளர்ந்து அருளுகிற தேசம் இது -என்கிறார்.) 10
செரு ஆளும் புள் ஆளன் மண் ஆளன் செரு செய்யும் நாந்தகம் என்னும்
ஒரு வாளன் மறை யாளன் ஓடாத படை ஆளன் விழுக்கை ஆளன்
இரவாளன் பகலாளன் என்னை ஆளன் ஏழுலகப் பெரும் புரவாளன்
திருவாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே –4-9-10
செரு ஆளும்,Seru Aalum - தானே போர்ச்செய்யவல்ல
புள் ஆனன்,Pul Aanam - பெரிய திருவடிக்குத் தலைவனும்,
மண் ஆனன்,Man Aanam - லீலாவிபூதியை ஆளுமவனும்,
செரு செய்யும்,Seru Seiyyum - (ஆச்ரித விரோதிக்கு எதிர்த்துப்) பூசல் செய்யவில்லை.
நாந்தகம் என்னும்,Naandhagam Ennum - நந்தகம் என்கிற
ஒருவானன்,Oruvaanan - ஒப்பற்றதொரு கொற்றவாளையுடையவனும்
மறை ஆனன்,Marai Aanam - நான்கு வேதங்களையும் ஆணாமவனும்
ஓடாத,Odaadha - (போர்க்களத்தில்) முதுகுகாட்டி ஒடாத
படை ஆனன்,Padai Aanam - ஸேனைகளை யுடையவனும்,
விழு கை ஆனன்,Vizhu Kai Aanam - சிறந்த ஔதார்ய முடையனும்,
இரவு ஆனன்,Iravu Aanam - ராத்ரி காலத்துக்கு நியாதமகனும்,
பகல் ஆனன்,Pagal Aanam - பகற்போதுக்கு நியாமகனும்
என்னை ஆனன்,Ennai Aanam - அடியேனுக்கு தலைவனும்
ஏழ் உலகம்பெரு புரவு ஆனன்,Ezh Ulagamperu Puravu Aanam - ஸப்தலோகங்களாகிய பெரிய ஸுஷேத்திரங்களை ஆளுமவனும்
திரு ஆன்,Thiru Aan - பெரிய பிராட்டியாரை (த் தேவியாக) ஆளுமவருமான எம்பெருமான்
இனிது ஆக,Inidhu Aaga - திருவள்ளமுவந்து
திருக்கண்கள் வளர்கின்ற,Thiruk Kangal Valarkkinra - திருக்கண் வளர்ந்தருளு (கோயிலாவது;)