Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 422 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
422ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார்.) 11
கைந்நாகத் திடர் கடிந்த கனல் ஆழி படை வுடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரந்தத் திருப்பதியின் மேல்
மெய்நாவன் மெய்யடியான் விட்டு சித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணை அடிக் கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே –4-9-11
கை நாகத்து இடர் கடிந்த,Kai Naagaththu Idar Kadindha - பெரிய துதிக்கையையுடைய கஜேந்திராழ்வா னுடைய துன்பத்தைப் போக்கின
கனல் ஆழி,Kanal Aazhi - ஜ்வலியா நின்றுள்ள திருவாழியாழ்வனை
படை உடையான்,Padai Udaiyaan - ஆயுதமாகவுடைய எம்பெருமான்
கருதும் கோயில்,Karudhum Koyil - விரும்பி எழுந்தருளியிருக்கப்பெற்ற கோயிலாய்
தென் நாடும் வட நாடும் தொழ நின்ற,Then Naadum Vada Naadum Thozha Nindra - தென்னாட்டிலுள்ளாரும் வடநாட்டிலுள்ளாரும் ஸேவிக்கும்படி அமைந்த
திரு அரங்கம் திருப்பதியின்மேல்,Thiru Arangam Thiruppathiyinmel - திருவரங்கமென்னும் திருப்பதி விஷயமாக
மெய் நாவன் மெய் அடியான் விட்டு சித்தன்,Mei Naavan Mei Adiyaan Vittu Siththan - மெய்யே சொல்லா நின்ற நாவையுடையரும் பிரயோஜனத்தை விரும்பாது அடிமை செய்பவருமான பெரியாழ்வார்
விரித்த தமிழ்,Viritha Tamil - அருளிச்செய்த இத்தமிழ்ப் பாசுரங்களை
உரைக்க வல்லார்,Uraikka Vallaar - ஓதவல்லவர்கள்
எம்பெருமான் இணை அடி கீழ்,Emperumaan Inai Adi Keezh - எனக்குச் சேஷியான பரமபத நாதனுடைய ஒன்றோடொன்றொத்த திருவடிகளின் கீழ்
எஞ்ஞான்றும் இணைபிரியாது இருப்பர்,Ennyaanrum Inaipiriyaadhu Irupaar - எந்நாளும் (நித்யமுக்தர்களின் திரளாகிற) துணையைப் பிரியாமல் (அவர்களோடு கூடி) வாழ்ந்திருக்கப்பெறுவர்