Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 427 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
427ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 5
பைய ரவினணைப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான் முகனை
வைய மனிசரைப் பொய் யென்றெண்ணிக் காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே–4-10-5
பால்கடலுள்,Paal Kadalul - திருப் பாற் கடலில்
பை அரவ இன் அணை,Pai Arava In Anai - (பரந்த) பாடல்களை யுடைய திருவனந்தாழ்வானகிய இனிய படுக்கையின் மீது
பள்ளி கொள்கின்ற,Palli Kolginra - திருக் கண் வளர்ந்தருளா நின்ற
பரம மூர்த்தி,Parama Moorththi - பரம சேஷியானவனே !
உய்ய,Uyya - (எல்லா வுயிர்களும் தன்னை அடைந்து) உஜ்ஜிவிக்கும்படி
உலகு,Ulagu - லோகங்களை
படைக்க வேண்டி,Padaikka Veendi - ஸ்ருஷ்டிக்க விரும்பி
உந்தியில்,Undhiyil - திரு நாபிக் கமலத்தில்
நான் முகனை,Naan Muganai - பிரமனை
தோற்றினாய்,Thotrinai - தோற்று வித்தவனே!
வையம்,Vaiyam - பூமியிலுள்ள
மனிசர்,Manisar - மனுஷ்யர்கள்
பொய் என்று எண்ணி,Poi Endru Enni - (நமது கட்டளையாகிய சாஸ்த்தர மரியாதையில் நிற்கமாட்டாது) க்ருத்ரிமராய் நடப்பவர்களென்று நினைத்து (அந்த விபரீதாசரணத்துக்கு தக்க தண்டம் நடத்துதற்காக)
காலனையும்,Kaalanaiyum - யமனையும்
உடனே,Udanae - கூடவே
படைத்தாய்,Padatthaai - ஸ்ருஷ்டித்தருளினவனே!
ஐய,Aiyaa - பரம பந்துலானவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!,Arangaththu Aravu Anaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
இனி என்னைக் காக்க வேண்டும்,Eni Ennaik Kaakka Vendum - இவர் என்னை காக்க வேண்டும்