| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 427 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 5 | பைய ரவினணைப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான் முகனை வைய மனிசரைப் பொய் யென்றெண்ணிக் காலனையும் உடனே படைத்தாய் ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே–4-10-5 | பால்கடலுள்,Paal Kadalul - திருப் பாற் கடலில் பை அரவ இன் அணை,Pai Arava In Anai - (பரந்த) பாடல்களை யுடைய திருவனந்தாழ்வானகிய இனிய படுக்கையின் மீது பள்ளி கொள்கின்ற,Palli Kolginra - திருக் கண் வளர்ந்தருளா நின்ற பரம மூர்த்தி,Parama Moorththi - பரம சேஷியானவனே ! உய்ய,Uyya - (எல்லா வுயிர்களும் தன்னை அடைந்து) உஜ்ஜிவிக்கும்படி உலகு,Ulagu - லோகங்களை படைக்க வேண்டி,Padaikka Veendi - ஸ்ருஷ்டிக்க விரும்பி உந்தியில்,Undhiyil - திரு நாபிக் கமலத்தில் நான் முகனை,Naan Muganai - பிரமனை தோற்றினாய்,Thotrinai - தோற்று வித்தவனே! வையம்,Vaiyam - பூமியிலுள்ள மனிசர்,Manisar - மனுஷ்யர்கள் பொய் என்று எண்ணி,Poi Endru Enni - (நமது கட்டளையாகிய சாஸ்த்தர மரியாதையில் நிற்கமாட்டாது) க்ருத்ரிமராய் நடப்பவர்களென்று நினைத்து (அந்த விபரீதாசரணத்துக்கு தக்க தண்டம் நடத்துதற்காக) காலனையும்,Kaalanaiyum - யமனையும் உடனே,Udanae - கூடவே படைத்தாய்,Padatthaai - ஸ்ருஷ்டித்தருளினவனே! ஐய,Aiyaa - பரம பந்துலானவனே! அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!,Arangaththu Aravu Anaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே! இனி என்னைக் காக்க வேண்டும்,Eni Ennaik Kaakka Vendum - இவர் என்னை காக்க வேண்டும் |