Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 428 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
428ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 6
தண்ணென வில்லை நமன் தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமு மாகி நின்றாய்
எண்ணலாம் போதே உன் நாம மெல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு
என்றும் அண்ணலே நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-6
மண்ணொடு,Mannodu - பூமியும்
நீரும்,Neerum - ஜலமும்
எரியும்,Eriyum - தேஜஸ்ஸும்
காலும்,Kaalum - வாயுவும்
ஆகாசமும்,Aakaasamum - ஆகாசமும் (ஆகிய பஞ்ச பூதங்களும்)
மற்றும் ஆகி நின்றாய்,Matrum Aagi Nindraai - மற்றுமுள்ள பதார்த்தங்களுமாய் நின்றவனே!
அண்ணலே,Annaley - ஸர்வ ஸ்வாமி யானவனே!
அரக்கத்து அரவணைப் பள்ளியானே;,Arakkaththu Aravanaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
நமன் தமர்கள்,Naman Thamargal - யம கிங்கரர்கள்
தண்ணென வில்லை,Thannena Villai - இரக்க மற்றவர்களாய்க் கொண்டு
சால,Saala - மிகவும்
கொடுமைகள்,Kodumaigal - கொடிய சிஷைகளை
செய்யா நிற்பர்,Seiyaa Nirpar - பண்ணுவர்கள்;
எண்ணலாம் போதே,Ennalaam Podhae - (அப்படிப்பட்ட சிஷைகளுக்கு ஆளாகா தொழியும்படி.) அநுஸந்கைக்கு உரிய காலத்திலேயே
உன் நாமம் எல்லாம்,Un Naamam Ellaam - உன்னுடைய திருநாமங்களை யெல்லாம்.
எண்ணினேன்,Enninaen - அநுஸந்தித்தேன் (ஆதலால்)
என்னை,Ennai - அடியேனை
நீ,Nee - நீ
குறிக் கொண்டு,Kurik Kondu - நினைவுள்ளத்தில் கொண்டு
என்றும்,Endrum - எப்போதும்
காக்க வேண்டும்,Kaakka Vendum - காத்தருள வேணும்