Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 429 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
429ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 7
செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகனே எம்மானே
எஞ்சலி லென்னுடை யின்னமுதே ஏழுலகு முடையாய் என்னப்பா
வஞ்ச வுருவின் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது
அஞ்சலமென்று என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே–4-10-7
செம் சொல்,Sem Sol - ருஜுவான சொற்களை யுடைய
மறை,Marai - வேதத்துக்கு
பொருள் ஆகி நின்ற,Porul Aagi Nindra - அர்த்தமாயிருப்பவனும்
தேவர்கள்,Thaevargal.Devargal - நித்திய ஸூரிகளுக்கு
நாயகனே,Naayagane - தலைவனுமானவனே!
எம்மானே,Emmaanae - எம்பெருமானே!
எஞ்சல் இல்,Enjal Il - குறை வற்ற
இன்,En - பரம போக்யமான
உன்னுடை அமுதே,Unnudaiya Amudhe - எனக்கு (ரஸ்யமான) அம்ருதம் போன்றவனே!
ஏழு உலகும் உடையாய்,Ezh Ulagum Udaiyaai - உலகங்களுக் கெல்லாம் ஸ்வாமி யானவனே!
என் அப்பா,En Appa - எனக்கு உபகாரகனானவனே!
அரங்கத் தரவணைப் பள்ளியானே!;,Arangathth Aravanaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
வஞ்சம்,Vanjam - வஞ்சனை பொருந்திய
உருவின்,Uruvin - ரூபத்தை யுடையவரான
நமன் தமர்கள்,Naman Thamargal - யம கிங்கரர்கள்
என்னை,Ennai - அடியேனை
வலிந்து,Valindhu - பலாத்கரித்து
நலிந்து,Nalindhu - ஹிம்ஸித்துக் கொண்டு
பற்றும் போது,Patrum Podhu - பிடிக்கும் போது
அஞ்சல் என்று என்னை காக்க வேண்டும்,Anjal Endru Ennai Kaakka Vendum - அஞ்ச வேண்டா என்று என்னை காக்க வேண்டும்