Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 43 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
43ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 21
சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாத கேசத்தைத் தென் புதுவைப் பட்டன்
விருப்பா லுரைத்த இருபதோ டொன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத் தொன்றுவர் தாமே–1-2-21
சுரும்பு ஆர்,Surumbu aar - வண்டுகள் படிந்து நிறைந்த
குழலி,Kuzhali - கூந்தலை யுடையளான
அசோதை,Asodhai - யசோதைப் பிராட்டியால்
முன்,Mun - க்ருஷ்ணாவதார ஸமயத்திலே
சொன்ன,Sonnan - சொல்லப்பட்ட
திருப்பாத கேசத்தை,Thirupaadha kesaththai - பாதாதிகேசாந்த வர்ணநப் பாசுரங்களை
தென் புதுவை பட்டன்,Then puduvai pattan - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு (நிர்வாஹகரான) அழ்வார்
விருப்பால்,Viruppaal - மிக்க ஆதரத்தோடு
உரைத்த,Uraiththa - அருளிச்செய்த
இருபதோடுஒன்றும்,Irupathodunonrum - இவ்விருபத்தொரு பாட்டுக்களையும்
உரைப்பார் தாம்,Uraipaar thaam - ஓதுமவர்கள்
போய்,Poy - (இம் மண்டலத்தைக் கடந்து) போய்
வைகுந்தத்து,Vaikunthaththu - ஸ்ரீவைகுண்டத்திலே
ஒன்றுவர்,Ondruvar - பொருந்தப் பெறுவார்கள்